Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈஸியா கிடைக்கும் அரசு வேலை.. வரும் 17, 18ல் சுருக்கெழுத்தர் தேர்வு.. ஹால் டிக்கெட் எப்போன்னு பாருங்க

நவம்பர் 17, 18ம் தேதிகளில் சுருக்கெழுத்தர் தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் வரும் 17, 18ம் தேதிகளில் சுருக்கெழுத்தர் தேர்வு நடைபெற உள்ளது.. இதற்கான ஹால் டிக்கெட் எப்போது என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது..

எவ்வளவுதான் அறிவியல், கல்வியறிவு பெருகினாலும், நாட்டில் வேலைவாய்ப்பு பிரச்சனை என்பது இருந்து கொண்டே இருக்கிறது.

இதற்கு தமிழ்நாடும் விதிவிலக்கல்ல.. அதேசமயம், தமிழ்நாட்டில் பெரும் படிப்பு படித்த இளைஞர்கள் மத்தியிலும் அரசுப் பணிகளுக்கு என்று தனியிடம் இருக்கத்தான் செய்கிறது.

 GROUP 4

GROUP 4

எனவேதான், 10ம் வகுப்பு கல்வி தகுதி போதுமானதாக கொண்ட டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு முதுநிலை, இளநிலை மாணவர்கள் ஏராளமானோர் விண்ணப்பித்து, அதில் தேர்ச்சியும் பெற்று வருகின்றனர்.. பொதுவாக, குரூப் 4 வினாத்தாள் சற்று எளிதாக இருந்தாலும், அதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதாலேயே இந்த தேர்வின் தன்மை கடினமாகிவிடுகிறது... விடாமுயற்சி என்பதையும் தாண்டி, அரசு தட்டச்சுத் தேர்வு மற்றும் கணினிதிறன் தேர்வு போன்றவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் தேவையும் இன்று எழுந்துள்ளது.

 டைப்ரைட்டிங்

டைப்ரைட்டிங்

மத்திய அரசு என்றாலும் சரி, மாநில அரசுகளானாலும் சரி, சுப்ரீம்கோர்ட் என்றாலும் சரி, மாவட்ட நீதிமன்றங்களானாலும் சரி, தட்டச்சர், சுருக்கெழுத்தர் இல்லாமல் இயங்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.. மேலும், எஸ்எஸ்சி தேர்வாணையம் வெளியீடும் பெரும்பாலான காலிப் பணியிடங்களுக்கு தட்டச்சர், சுருக்கெழுத்தர் போன்ற தகுதிகள் மிக முக்கியமானதாகும்.. அந்தவகையில், மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் வரும் 17, 18ம் தேதிகளில் சுருக்கெழுத்தர் தேர்வு நடைபெற உள்ளது..

 ஷார்ட் ஹேண்ட்

ஷார்ட் ஹேண்ட்

இதற்கான ஹால் டிக்கெட் எப்போது என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.. மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தென்மண்டல இயக்குனர் நாகராஜா ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார்.. அதில் உள்ளதாவது: "மத்திய அரசின் தென்மண்டல பணியாளர் தேர்வாணையம், சுருக்கெழுத்தாளர் "சி' ,'டி' நிலை பணிக்கு தேர்வு, வரும் 17, 18ம் தேதிகளில் நடக்க உள்ளது.. தென் மண்டலத்தில் 35 ஆயிரத்து 557 பேர் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி நெல்லை ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது..

 ஹால் டிக்கெட்

ஹால் டிக்கெட்

தேர்வு நடைபெறும் தேதிக்கு 4 நாட்களுக்கு முன்பிருந்தும், தேர்வு எழுதுவோர், பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் இருந்தும், தங்கள் அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு அறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் எடுத்துவரக்கூடாது, அந்த பொருட்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டால், அவர்களின் விண்ணப்பங்கள் ரத்து செய்யப்படுவதுடன், குற்றவியல் ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் விவரங்களை, 044 - 2825 1139 என்ற தொலைபேசி எண்ணிலும், 94451 95946 என்ற மொபைல் போன் எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+