Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக அரசு துறையில் வேலை.. 8-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.. உடனே விண்ணப்பம் அனுப்புங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் 156 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் நேரடி கொள்முதல் பணிக்காக பருவகால பணியாளர்கள், பருவகால பட்டியல் எழுத்தர் மற்றும் பருவகால காவலர் பணியிடங்களுக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Tamil Nadu Consumer Goods Corporation has announced to select people for 156 posts

தமிழக அரசு நேரடி பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்ச வரம்பினை இரண்டு ஆண்டுகள் உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளதால், 01.07.2021 அன்று தகுதியுடைய நாளாக கணக்கில் கொண்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பருவகால பட்டியல் எழுத்தர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க பிஎஸ்சி இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பருவகால காவலர் பணியிடத்துக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விழுப்புரம் மாவட்டம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட தகுதியுடைய ஆண் விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 15.11.2021 ஆகும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தா.நா.நு.பொ.வா.கழகம், நம்பர் 1, ஹாஸ்பிடல் ரோடு, விழுப்புரம் 605 602 என்ற முகவரிக்கு வருகிற 15-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+