சவுதி அரேபியாவில் செவிலியர் வேலைக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு.. மிகப்பெரிய ஜாக்பாட் வாய்ப்பு
சென்னை: சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் 2 வருட பணி அனுபவத்துடன் பி.எஸ்சி. (நர்சிங்) தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு வேலை காத்துக்கொண்டிருக்கிறது.. நல்ல சம்பளம், உணவு, இருப்பிடம், விமான பயணச்சீட்டு போன்றவை வழங்கப்படுகிறது. வாழ்க்கையில் செட்டில் ஆக விரும்புவோர் இந்த அரிய வாய்பை பயன்படுத்தலாம். தமிழக அரசே இந்த வேலைக்கான ஆட்களை தேர்வு செய்த அனுப்புகிறது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த பல பெண்கள் டாக்டர் படிப்பு கிடைக்காத பட்சத்தில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதை அதிகம் விரும்புகிறார்கள். மிக அதிகமானோர் பிஎஸ்சி நர்சிங் படிக்க அங்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.. காரணம் அந்த படிப்பிற்கு வெளிநாடுகளில் உள்ள கிராக்கி தான் காரணம். 3 வருடம் நர்சிங் முடிந்து, உள்ளூரில் உள்ள ஓரளவு நல்ல மருத்துவமனைகளில் இரண்டு ஆண்டு வரை பயிற்சியுடன் கூடிய அனுபவம் பெறும் அவர்கள், அதன்பிறகு வளைகுடா நாடுகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிக்கு விண்ணிப்பிக்கிறார்கள்.

அங்கு வேலை கிடைத்த உடன் உடனடியாக அங்கு வேலையில் சேருகிறார்கள். அங்கு நல்ல சம்பளம் மற்றும் பணி அனுபவம் பெறும் அவர்கள்.. அஙகு குறைந்தது 4 அல்லது ஐந்து ஆண்டுகள் வேலை செய்து செட்டில் ஆகிறார்கள். அதன்பிறகு அந்த அனுபவத்தை வைத்து ஐரோப்பிய நாடுகளில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் பணிக்கு விண்ணப்பிக்கிறார்கள். அப்படி விண்ணப்பித்த பலருக்கு வேலையும் கிடைக்கிறது..
அப்படி வேலை கிடைத்த பின், சில ஆண்டுகளில் குடியுரிமை வாங்கி அங்கேயே செட்டில் ஆகிவிடுகிறார்கள். நல்ல சம்பளம், நிரந்தரமான வேலை.. அருமையான வாழ்க்கை சூழல் என எல்லாமே அவர்களுக்கு கிடைத்துவிடுவதால், வறுமையில் இருந்து பலர் மீண்டு வெற்றி பெற்றுள்ளார்கள். எனவே சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வேலை கிடைத்தால் நர்சிங் வாய்ப்பை விட்டுவிட வேண்டாம். எனினும் அரசே ஏற்படுத்தி தரும் வாய்ப்புகள் மூலமாக மட்டுமே செல்வது பணிக்கு உத்தரவாதமாக இருக்கும். அப்படி ஒரு வாய்ப்பு வந்துள்ளது.
தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் 2 வருட பணி அனுபவத்துடன் பி.எஸ்சி. (நர்சிங்) தேர்ச்சி பெற்ற 35 வயதுக்கு உட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.
இவர்களுக்கான நேர்காணல் அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை கொச்சியில் நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை வேலையளிப்பவரால் வழங்கப்படும். இந்த பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்www.omcmanpower.tn.gov.inஎன்ற வலைதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும். சுய விவர விண்ணப்ப படிவம், கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட், அனுபவ சான்றிதழ் ஆகியவற்றை ovemclmohsa2021 @gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு டிசம்பர் 2-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். படிப்பு மற்றும் பணி விவரங்களின் தகுதியை பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications