TCS வேலைவாய்ப்பு.. சென்னை உள்பட 3 இடங்களில் பணி நியமனம்.. ரெடியா?
சென்னை: சென்னை உள்பட 3 இடங்களில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS or Tata Consultancy Services) எனும் டிசிஎஸ் ஐடி நிறுவனம் பல இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது சென்னை, புனே, கொச்சியில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்ற ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி டிசிஎஸ் நிறுவனத்தில் MS SQL Database Administrator பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் 6 முதல் 8 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் Prod, Dev & Test Servers உள்ளிட்டவற்றில் எஸ்க்யூஎல் டேட்டாபேஸ் பேக்அப் மற்றும் ரீஸ்டோரேஷன் தெரிந்திருக்க வேண்டும். ஸ்பேஸ், பிளாக்கிங் மற்றும் டெட் லாக் பிரச்சனைகளை கண்காணித்து சரிசெய்ய தெரிந்திருக்க வேண்டும். மேலும் VM ware மற்றும் Cloud DB infra Deployment-ல் எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டும்.
இதுதவிர Oracle & PostgreSQl ஆகியவை பற்றி நல்ல அறிவு பெற்றிருக்க வேண்டும். தற்போது வெளியாகி உள்ள இந்த பணிக்கு வழங்கப்படும் சம்பளம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் பற்றி அனுபவம் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படலாம். சம்பளம் பற்றி இறுதிக்கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்படலாம்.
இந்த பணிக்கான அறிவிப்பு என்பது 10 நாட்களுக்கு முன்பே வந்துவிட்டது. விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. ஏனென்றால் பணிக்கான விண்ணப்ப தேதி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications