நோ எக்ஸாம்.. 8 ம்வகுப்பு படித்தாலே.. கைநிறைய சம்பளத்தில் தூத்துக்குடியில் அரசு வேலை! ரெடியா?
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. எழுத்து தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.15,700 முதல் அதிகபட்சமாக ரூ.62 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு 8 ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
தமிழ்நாட்டில் துறை வாரியாக காலியாக உள்ள பணியிடங்கள் ஒவ்வொன்றாக நிரப்பப்பட்டு வருகிறது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பல பணியிடங்கள் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் நேரடியாக நியமனம் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.

அதன்படி தற்போது தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் 3 பிரிவுகளில் வெவ்வேறு காலிப்பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் மொத்தம் 30 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர், அலுவலக உதவியாளர் என 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி அலுவலக உதவியாளர் பணிக்கு 23 பேர், டிரைவர் பணிக்கு 3 பேர், இரவு காவலாளி பணிக்கு 4 பேர் என 30 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதில் அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ம்வகுப்பு முடித்திருக்க வேண்டும். டிரைவர் பணிக்கு 8 ம் வகுப்பு முடித்து லைசென்ஸ் வைத்திருப்பதோடு, காவலாளி பணிக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும். பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் எஸ்சி, எஸ்டி என்ற 37 வயதுக்குள்ளும், எம்பிசி, டிஎன்சி, பிசி என்றால் 34 வயதுக்குள்ளும் ஜிடி என்றால் 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகள்படி மற்றவர்களுக்கும் வயது தளர்வு உண்டு.
அலுவலக உதவியாளர் மற்றும் காவலாளி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50 ஆயிரம் வரையும், டிரைவருக்கு ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையும் வழங்கப்படும். பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் தூத்துக்குடி, ஆழ்வார்குறிச்சி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் பணியமர்த்தப்படுவார்கள். எந்த ஊராட்சி ஒன்றியங்களில் பணி வேண்டுமோ அந்த ஊராட்சி ஒன்றியம் சென்று விண்ணப்ப படிவங்களை வாங்கி பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
இதுதவிர தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://thoothukudi.nic.in/ இணையதளம் சென்ற விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் ஏப்ரல் 4ம் தேதிக்குள் தபால் முறையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டு இருப்பது போல் அனுப்பி வைக்கலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பார்த்து விண்ணப்பம் பதிவிறக்கவும் Click Here
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications