நோ எக்ஸாம்.. 8 ம்வகுப்பு படித்தாலே.. கைநிறைய சம்பளத்தில் தூத்துக்குடியில் அரசு வேலை! ரெடியா?
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. எழுத்து தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.15,700 முதல் அதிகபட்சமாக ரூ.62 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு 8 ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
தமிழ்நாட்டில் துறை வாரியாக காலியாக உள்ள பணியிடங்கள் ஒவ்வொன்றாக நிரப்பப்பட்டு வருகிறது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பல பணியிடங்கள் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் நேரடியாக நியமனம் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.

அதன்படி தற்போது தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் 3 பிரிவுகளில் வெவ்வேறு காலிப்பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் மொத்தம் 30 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர், அலுவலக உதவியாளர் என 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி அலுவலக உதவியாளர் பணிக்கு 23 பேர், டிரைவர் பணிக்கு 3 பேர், இரவு காவலாளி பணிக்கு 4 பேர் என 30 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதில் அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ம்வகுப்பு முடித்திருக்க வேண்டும். டிரைவர் பணிக்கு 8 ம் வகுப்பு முடித்து லைசென்ஸ் வைத்திருப்பதோடு, காவலாளி பணிக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும். பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் எஸ்சி, எஸ்டி என்ற 37 வயதுக்குள்ளும், எம்பிசி, டிஎன்சி, பிசி என்றால் 34 வயதுக்குள்ளும் ஜிடி என்றால் 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகள்படி மற்றவர்களுக்கும் வயது தளர்வு உண்டு.
அலுவலக உதவியாளர் மற்றும் காவலாளி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50 ஆயிரம் வரையும், டிரைவருக்கு ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையும் வழங்கப்படும். பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் தூத்துக்குடி, ஆழ்வார்குறிச்சி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் பணியமர்த்தப்படுவார்கள். எந்த ஊராட்சி ஒன்றியங்களில் பணி வேண்டுமோ அந்த ஊராட்சி ஒன்றியம் சென்று விண்ணப்ப படிவங்களை வாங்கி பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
இதுதவிர தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://thoothukudi.nic.in/ இணையதளம் சென்ற விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் ஏப்ரல் 4ம் தேதிக்குள் தபால் முறையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டு இருப்பது போல் அனுப்பி வைக்கலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பார்த்து விண்ணப்பம் பதிவிறக்கவும் Click Here
-
உத்தரப் பிரதேசத்தில் கொழுந்துவிட்டு எரியும் தீ! சம்பள பிரச்சனையில் தொழிலாளர்கள் ஆவேசம்! -
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு! உடனே விண்ணப்பிங்க -
நிலக்கரி நிறுவனத்தில் 1,055 காலியிடங்கள்.. 47 ஆயிரம் சம்பளம்! மத்திய அரசு கம்பெனிங்க.. விட்றாதீங்க -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல்












Click it and Unblock the Notifications