நெல் கொள்முதல் நிலையத்தில் வேலை.. தஞ்சாவூர் இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. 8, 12 ஆம் வகுப்பு தகுதி தான்
சென்னை: தஞ்சை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பருவகால உதவியாளர் மற்றும் பருவகால காவலர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 8 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது, சம்பளம் எவ்வளவு வழங்கப்படும் உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காலியாக உள்ள 240 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தஞ்சாவூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால உதவியாளர் (ஆண்/பெண்) மற்றும் பருவகால காவலர் (ஆண்கள் மட்டும்) ஆகிய பணியிடங்களுக்கு கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:
* பருவகால உதவியாளர்: 120
* பருவகால காவலர்: 120
கல்வி தகுதி:
* பருவகால உதவியாளர் பணிக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* பருவகால காவலர் பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.
வயது வரம்பு:
வயது வரம்பைப் பொறுத்தவரை 01.11.2025 தேதிப்படி 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். BC/MBC, BCM பிரிவினருக்கு 34 வயது வரையும், SC/ST பிரிவினருக்கு 37 வயது வரையும் தளர்வுகள் உண்டு. பருவகால காவலர் பணிக்கு 32 வயது வரையுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். BC/MBC/BCM பிரிவினர் 34 வயது வரையும், SC/ST, SC(A) பிரிவினருக்கு 37 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். அடிப்படை ஊதியம்: ரூ.5,218/-, அகவிலைப்படி (DA): ரூ.3,499/-. போக்குவரத்துப்படி: பணிபுரியும் நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100/- வீதம் வழங்கப்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட மேற்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் முதுநிலை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், எண்.1, சச்சிதானந்த மூப்பனார் ரோடு, தஞ்சாவூர்-613001 என்ற முகவரியில் அலுவலக நாட்களில் நேரடியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் 28.11.2025 அன்று மாலை 5.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
விண்ணப்பிக்க இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளதால், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். எனவே, தகுதியுள்ள தஞ்சாவூர் மாவட்ட இளைஞர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-
IT Jobs: 3 பிரிவில் காலியிடங்கள்.. சென்னை உள்பட 2 இடங்களில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. ரெடியா? -
IT JOBS: சென்னை டிசிஎஸ் அலுவலகத்தில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. இந்த வேலைவாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க -
MBBS Job: மத்திய அரசில் மருத்துவ அதிகாரி வேலை.. யுபிஎஸ்சி அறிவிப்பு! 1,358 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க ரெடியா -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை












Click it and Unblock the Notifications