Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பழனி கோயிலுக்கு மூட்டை மூட்டையாக குவிந்த விண்ணப்பங்கள்.. 296 பணியிடங்களுக்கு 1 லட்சம் விண்ணப்பங்கள்

Subscribe to Oneindia Tamil

பழனி: முருகனின் அறுபடை வீடான பழனி கோயிலில் இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனையாளர், சத்திரம் காப்பாளர், சுகாதார மேஸ்திரி என 296 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள், 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி, என்ஜினியர் ஆகிய படிப்புகளை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. 296 பணியிடங்களுக்கு சுமார் 1 லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விண்ணப்ப மனுக்கள் மூட்டை மூட்டையாக தேவஸ்தான அலுவலகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

முருகனின் அறுபடை வீடுகளில் 3 ஆம் படை வீடு என்று அழைக்கப்படுவது பழனி முருகன் கோவில். இந்த கோயிலில் காலியாக உள்ள 296 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்து சமய அறநிலையத்துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. எழுத்து தேர்வு எதுவும் இன்றி நேர்முகத்தேர்வு அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தேர்வு அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது.

job palani temple employment

இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனையாளர், சத்திரம் காப்பாளர், சுகாதார மேஸ்திரி (மலைக்கோவில்), சுகாதார மேஸ்திரி (அனைத்து உப நிறுவனங்கள்), சுகாதார மேஸ்திரி (அனைத்து உப கோயில்கள்), பூஜை / காவல் (உபக்கோயில்), காவல் (உபக்கோயில் மற்றும் உப நிறுவனங்கள், துப்புரவு பணியாளர் (மலைக்கோயில்) துப்புரவு பணியாளர் (உப கோயில்கள் மற்றும் உப நிறுவனங்கள்), கால்நடை பராமரிப்பு, உதவி யானை மாவுத்தர், சுகாதார ஆய்வாளர், உதவி பொறியாளர் (மின்னணுவியல்), உதவி பொறியாளர் (சிவில்), இளநிலை பொறியாளர் என மொத்தம் 296 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியிருந்தது.

தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள், 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி, என்ஜினியர் ஆகிய படிப்புகளை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. நேரடியாகவும் தபால் மூலமாகவும் கோவில் அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்றுடன் விண்ணப்பிக்க அவகாசம் முடிந்த நிலையில், இந்த பணியிடங்களுக்கு தமிழகம் முழுவதும் இருந்து பலரும் ஆர்வத்துடன் விண்ணப்பித்து இருந்தது தெரியவந்துள்ளது.

அறநிலையத்துறை வேலை என்பதால் கை நிறைய சம்பளம், சலுகைகள் குறைந்த கல்வி தகுதி கொண்ட பணியிடங்களுக்கு கூட பட்டதாரிகள், முதுகலை பட்டம் படித்தவர்கள் விண்ணப்பித்து இருக்கலாம் என சொல்லப்படுகிறது. 296 பணியிடங்களுக்கு சுமார் 1 லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விண்ணப்ப மனுக்கள் மூட்டை மூட்டையாக தேவஸ்தான அலுவலகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இவை பரிசீலனை செய்யப்பட்டு எந்த தேதிகளில் நேர்முகத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+