பழனி கோயிலுக்கு மூட்டை மூட்டையாக குவிந்த விண்ணப்பங்கள்.. 296 பணியிடங்களுக்கு 1 லட்சம் விண்ணப்பங்கள்
பழனி: முருகனின் அறுபடை வீடான பழனி கோயிலில் இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனையாளர், சத்திரம் காப்பாளர், சுகாதார மேஸ்திரி என 296 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள், 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி, என்ஜினியர் ஆகிய படிப்புகளை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. 296 பணியிடங்களுக்கு சுமார் 1 லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விண்ணப்ப மனுக்கள் மூட்டை மூட்டையாக தேவஸ்தான அலுவலகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
முருகனின் அறுபடை வீடுகளில் 3 ஆம் படை வீடு என்று அழைக்கப்படுவது பழனி முருகன் கோவில். இந்த கோயிலில் காலியாக உள்ள 296 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்து சமய அறநிலையத்துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. எழுத்து தேர்வு எதுவும் இன்றி நேர்முகத்தேர்வு அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தேர்வு அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது.

இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனையாளர், சத்திரம் காப்பாளர், சுகாதார மேஸ்திரி (மலைக்கோவில்), சுகாதார மேஸ்திரி (அனைத்து உப நிறுவனங்கள்), சுகாதார மேஸ்திரி (அனைத்து உப கோயில்கள்), பூஜை / காவல் (உபக்கோயில்), காவல் (உபக்கோயில் மற்றும் உப நிறுவனங்கள், துப்புரவு பணியாளர் (மலைக்கோயில்) துப்புரவு பணியாளர் (உப கோயில்கள் மற்றும் உப நிறுவனங்கள்), கால்நடை பராமரிப்பு, உதவி யானை மாவுத்தர், சுகாதார ஆய்வாளர், உதவி பொறியாளர் (மின்னணுவியல்), உதவி பொறியாளர் (சிவில்), இளநிலை பொறியாளர் என மொத்தம் 296 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியிருந்தது.
தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள், 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி, என்ஜினியர் ஆகிய படிப்புகளை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. நேரடியாகவும் தபால் மூலமாகவும் கோவில் அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்றுடன் விண்ணப்பிக்க அவகாசம் முடிந்த நிலையில், இந்த பணியிடங்களுக்கு தமிழகம் முழுவதும் இருந்து பலரும் ஆர்வத்துடன் விண்ணப்பித்து இருந்தது தெரியவந்துள்ளது.
அறநிலையத்துறை வேலை என்பதால் கை நிறைய சம்பளம், சலுகைகள் குறைந்த கல்வி தகுதி கொண்ட பணியிடங்களுக்கு கூட பட்டதாரிகள், முதுகலை பட்டம் படித்தவர்கள் விண்ணப்பித்து இருக்கலாம் என சொல்லப்படுகிறது. 296 பணியிடங்களுக்கு சுமார் 1 லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விண்ணப்ப மனுக்கள் மூட்டை மூட்டையாக தேவஸ்தான அலுவலகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இவை பரிசீலனை செய்யப்பட்டு எந்த தேதிகளில் நேர்முகத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications