Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்து சமய அறநிலையத்துறையில் வேலை.. தூத்துக்குடியில் பணியிடம்.. 60 ஆயிரம் சம்பளம்! மிஸ் பண்ணிடாதீங்க

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான தூத்துக்குடி குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் திருக்கோவிலில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இந்த கோவில் பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்? எப்படி விண்ணப்பிப்பது? போன்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் திருக்கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். நாட்டிலேயே மைசூருக்கு அடுத்தபடியாக இந்தக் கோவிலில் தான் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

kulasai mutharamman temple employment

இந்தக் கோவிலில் ஏற்படும் நிர்வாக காலிப்பணியிடங்கள் மற்றும் இதர பணியிடங்கள் இந்து சமய அறநிலயத்துறையால் உரிய அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது காலியாக உள்ள 6 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
மெடிக்கல் ஆஃபிசர் - 02 பணியிடங்கள்
ஸ்டாப் நர்ஸ் - 02
பல்நோக்கு சுகாதார பணியாளர் - 02 என மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வித் தகுதி:
* மெடிக்கல் ஆபிசர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் எம்பிபிஎஸ் முடித்து இருக்க வேண்டும். TNMSE யில் பதிவு செய்து இருப்பது அவசியம்.
* ஸ்டாப் நர்ஸ் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் பொது நர்சிங்க் பிரிவில் டிப்ளமோ DGNM முடித்து இருக்க வேண்டும்.
* மல்டி பர்போஸ் சுகாதார பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 8-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்.

வயது வரம்பு: மெடிக்கல் ஆஃபிசர், ஸ்டார் நர்ஸ் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 35 -வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பல்நோக்கு சுகதார பணியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இது முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான பணி ஆகும். மெடிக்கல் ஆபிசர் பணிக்கு ரூ.60 ஆயிரமும், நர்ஸ் பணிக்கு ரூ.14 ஆயிரமும், சுகாதார பணியாளர் பணிக்கு ரூ.6 ஆயிரமும் வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?: விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
செயல் அலுவலர்,
அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில்,
குலசேகரன்பட்டினம்,
திருச்செந்தூர் வட்டம்
தூத்துக்குடி மாவட்டம் - 628206

என்ற முகவரிக்கு 05.10.2024 அன்று மாலை 5.45 மணிக்குள் கிடைத்திடும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை கோயில் அலுவலகத்தில் நேரிலோ அல்லது hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் முத்தாரம்மன் திருக்கோவில் எங்கிற பெயரில் உள்ள பக்கத்தில் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கேட்கப்பட்ட விவரங்கள்,சான்றுகள் ஆகியை இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

தேர்வு அறிவிப்பினை படிக்கவும், விண்ணப்பத்தை டவுன்லோடு செய்யவும் இங்கே
https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/193/document_1.pdf கிளிக் செய்யவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+