Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டப்படிப்பை முடித்தவரா நீங்கள்? சிவில் நீதிபதியாக சூப்பர் வாய்ப்பு.. டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதிகளின் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. சட்டப்படிப்பை முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கும் மாதம் குறைந்தபட்சம் ரூ.27,700 முதல் அதிகபட்சமாக ரூ.44,770 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறைகளுக்கு தேவையான ஆட்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.

 TNPSC Civil Judge Recruitment 2023 for 245 vacancies

அந்த வகையில் தான் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதிகளின் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பயிற்சி பெறுவோர், அரசு வழக்கறிஞராக இருப்போர், புதிதாக சட்டப்படிப்பை முடித்தவர்கள் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

இதில் வழக்கறிஞராக பயிற்சி பெறுவோர், அல்லது அரசு வழக்கறிஞராக இருப்போர் எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, எம்பிசி, டிசி, பிசி, பிசிஎம் பிரிவை சேர்ந்தவர்கள் என்றால் குறைந்தபட்சம் 25 வயதும், அதிகபட்சம் 42 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மற்றவர்கள் என்றால் அதிகபட்சமாக 37 வயதுக்குள் இருக்க வேண்டும். புதிதாக சட்டப்படிப்பை முடித்தவர்கள் என்றால் யாராக இருந்தாலும் அவர்களின் குறைந்தபட்ச வயது 22 ஆகவும், அதிகபட்சம் 29 வயதாகவும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளியாக இருந்தால் 10 வயது வரை தளர்வு வழங்கப்படும்.

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.27,700 முதல் அதிகபட்சமாக ரூ.40,450 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜூன் மாதம் 30ம் தேதிக்குள் டிஎன்பிஎஸ்சி இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய ஜூலை 5ம் தேதி மதியம் 12 மணி முதல் ஜூலை 7 ம் தேதி மதியம் 11.59 மணி வரை அவகாசம் வழங்கப்படும்.

விண்ணப்பிப்போருக்கு ஒருமுறை பதிவு கட்டணமாக ரூ.150 உள்ளது. அதன்பிறகு முதல்நிலை தேர்வு கட்டணமாக ரூ.100ம், மெயின் தேர்வுக்கான கட்டணமாக ரூ.200ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், கணவரை இழந்த பெண்களுக்கு தேர்வு கட்டணம் என்பது கிடையாது.

இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி முதல்நிலை தேர்வு (Preliminary Exam) ஆகஸ்ட் 19ம் தேதி காலை 9.30 மணிக்கு நடக்கும். அதன்பிறகு மெயின் தேர்வு 4 பிரிவுகளாக நடக்கும். மொழிமாற்றத்துக்கான தேர்வு அக்டோபர் 28 ம் தேதி காலை 9 மணிக்கும், சட்டம் தொடர்பான தேர்வு - I அன்றைய தினம் மதியம் 2 மணிக்கும் நடக்கும்.

அதன்பிறகு சட்டம் தொடர்பான தேர்வு - II அக்டோபர் 29ம் தேதி காலை 9 மணிக்கும், சட்டம் தொடர்பான தேர்வு III என்பது அன்றைய தினம் மதியம் 2 மணிக்கும் தொடங்கி நடக்கும். ஒவ்வொரு தேர்வும் 3 மணிநேரம் நடக்கும் என டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விபரங்களை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+