அதிரடி! ஆவின் காலி பணியிடங்கள் இனி டிஎன்பிஎஸ்சி வாயிலாக நிரப்பப்படும்.. 322 காலியிடங்களுக்கு அழைப்பு
மேலாளர், துணை மேலாளர், தொழிநுட்ப வல்லுநர் உள்ளிட்ட 322 காலிப்பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளது.
சென்னை: ஆவின் நிறுவனத்தில் 322 பணியிடங்கள் இனிமேல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலாளர், துணை மேலாளர், தொழிநுட்ப வல்லுநர் உள்ளிட்ட 322 காலிப்பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளது.
அரசு வேலை பார்க்க வேண்டும் என்பது பலருக்கும் கனவு. அந்த கனவு நனவாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை எழுத வேண்டும். குரூப் 1, குரூப் 2, குரூப் 4, விஏஒ உள்ளிட்ட பல தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றால் மட்டுமே அதற்கான பணிகளில் சேர முடியும்.

தமிழக அரசுக்கு சொந்தமான பால் நிறுவனமான ஆவின் என்பது பால் கொள்முதல் பதப்படுத்துதல் குளிரூட்டல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவை செய்து வரும் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இதற்கான பணியிடங்களுக்கும் மேலும் தமிழகத்தில் உள்ள அரசு பணியிடங்களுக்கும் தமிழர்களுக்கு மட்டுமே நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் சட்டசபையில் இது குறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மனு தாக்கல் செய்தார்.
மேலும் ஆவின் பணிக்கான ஆட்சேர்க்கையும் அரசுக்கு சொந்தமான சட்டப்பூர்வமான வாரியங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கழகங்கள், மேலும் மாநில அரசுக்கு கீழ் உள்ள அதிகார அமைப்புகளின் பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கையும் அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து சட்டசபையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். இவரது கோரிக்கை சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. மேலும் இதற்கு அரசு தரப்பில் இருந்து ரூ.3,19,65000 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து போக்குவரத்து ஊழியர்கள் பணிகளின் ஆட்சேர்க்கையும் அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்திடம் ஓப்படைக்கப்பட்டு இதற்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்குவதற்காக முன்பணமாக 97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுதோறும் நடைபெறும் டிஎன்பிஎஸ்சி தேர்வு விதிமுறைகள் இப்பணி தேர்வுகளுக்கும் விதிக்கப்பட்டு தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆவின்,போக்குவரத்து மற்றும் அரசுக்கு கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களின் பணியில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே மேலாளர், துணை மேலாளர், தொழிநுட்ப வல்லுநர் உள்ளிட்ட 322 காலிப்பணியிடங்கள் தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு












Click it and Unblock the Notifications