TNPSC Job Alert:டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. முழு தகவல்
சென்னை: டிஎன்பிஎஸ்சி-இல் தற்போது புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள 50 உதவி அரசு வழக்கறிஞர்களின் பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தற்போது புதிதாக சட்டத்துறை சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதில் கிரேடு 2 பிரிவில் காலியாக உள்ள 50 உதவி அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள் - 50
பணி - உதவி அரசு வழக்கறிஞர்கள் (Assistant Public Prosecutor)
கல்வித் தகுதி: அரசு அங்கீகரித்த கல்லூரியில் பிஎல் படித்திருக்க வேண்டும். பார் கவுன்சிலின் உறுப்பினராக இருக்க வேண்டும். தமிழில் போதிய அறிவு பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பவம் - ரூ 56,100 ஆயிரம் முதல் ரூ 1.77 லட்சம் வரை
வயது வரம்பு: 34 வயது வரை
தமிழக அரசின் விதிகளின்படி எஸ்சி, எஸ்டி. எம்பிசி, ஒபிசி உள்ளிட்ட சில பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.
தேர்வு செய்யும் முறை - 3 வகையான தேர்வுகள் (முதல்நிலை, முதன்மை எழுத்துத் தேர்வு + நேர்முகத் தேர்வு)
விண்ணப்ப கட்டணம் - முதல் நிலை தேர்வுக்கு 100 ரூபாய், முதன்மை தேர்வுக்கு 200 ரூபாய்
தமிழ்நாடு அரசின் விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்குத் தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பிக்கும் முறை - http://www.tnpsc.gov.in/ அல்லது http://www.tnpscexams.in/ தளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்கக் கடைசி தேதி - செப்டம்பர் 24, 2021
இது குறித்துக் கூடுதல் விவரங்களை
https://www.tnpsc.gov.in/Document/english/12_2021_COMBINED%20GEOLOGY_ENG.pdf
விண்ணப்பிக்க
https://www.tnpsc.gov.in/Document/english/10_2021_APP_ENG.pdf












Click it and Unblock the Notifications