தமிழ்நாடு காவல்துறையில் வேலை.. 3 ஆயிரம் பணியிடங்கள்.. தேதி முடிய போகுது.. மிஸ் பண்ணிடாதீங்க!
சென்னை: தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 3,359 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (17.09.2023) கடைசி நாளாகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான தேர்வர்கள் மறக்காமல் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.
காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்பது வேலை தேடும் பல இளைஞர்களின் கனவுகளில் ஒன்றாகும். காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்தில் இளம் வயதில் இருந்தே இதற்கான உடல் தகுதியை பராமரித்துக் கொண்டு தீவிர பயிற்சியை பல இளைஞர்களும் மேற்கொண்டு வருவதை காண முடியும்.

தமிழக காவல் துறையை பொறுத்தவரை அவ்வப்போது ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டு நிரப்பி வருகிறது. அந்த வகையில், இரண்டாம் நிலைக் காவலர் , இரண்டாம் நிலை சிறைக் காவலர், மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத்தேர்வு மூலம் ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
காலி பணியிடங்கள்: இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட/ மாநகர ஆயுதப் படை) -780 பெண்கள்; இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல் படை) 1819 (ஆண்கள்) , சிறை மற்றும் சீர்திருத்த துறையில் இரண்டாம் நிலை காவலர் பதவிக்கு 83 ஆண்களும் 3 பெண்களும் என மொத்தம் 86 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
தீ அணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் தீயணைப்பாளர் பதவிக்கு 674 பேர் நியமிக்கப்படுகிறார்கள். மொத்தமாக 2,576 ஆண்கள், 783 பெண்கள் என மொத்தம் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களில் 3,359 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
வயது வரம்பு: 1.07.2023 படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி ஆகியிருக்க வேண்டும். அதிகபட்சமாக 26 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது. (வயது உச்ச வரம்பில் அரசு விதிகளின் படி தளர்வுகள் உண்டு. எனவே பிரிவுகளுக்கு தகுந்தபடி மாறுபடும்)
சம்பளம் எவ்வளவு?: இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான ஊதிய விகிதம்: ரூ.18,200- 67,100
விண்ணப்பிப்பது எப்படி?: இணையவழி விண்ணப்பம் சமர்பிப்பதற்கான ஆரம்ப தேதி 18.08.2023, விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாள்; 17.09.2023. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். கூடுதல் விவரங்களை https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த தேர்வில் கலந்துகொள்வதற்கு குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
-
IT JOBS: 11 பிரிவுகளில் ஐடி வேலை.. மார்ச் 14ல் இண்டர்வியூ.. சென்னை - பெங்களூரில் வேலை -
இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு.. 67 ஆயிரம் வரை சம்பளம்! 10, 12 ஆம் வகுப்பு தகுதி தான் -
இந்திய அணுமின் கழகத்தில் வேலை.. ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. எக்ஸாம் கிடையாது! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட்












Click it and Unblock the Notifications