தமிழக காவல்துறையில் எஸ்ஐ வேலை.. ரிசல்ட் வெளியீடு! பார்ப்பது எப்படி? ஒரு பணிக்கு எத்தனை பேர் தேர்வு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எஸ்ஐ காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 1,299 காலிப் பணியிடங்களுக்கு டிசம்பர் 21 ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெற்ற நிலையில் இன்று ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை TNUSRB.TN.GOV.IN -இல் தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம்.

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் காவல்துறையில் காலியாக உள்ள 1,299 காவல் உதவியாளர் (எஸ்.ஐ) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்வை ஒரு லட்சத்து 78 ஆயிரம் பேர் எழுதினர்.

job Employment chennai

தேர்வர்கள் தேர்வு முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த நிலையில் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை TNUSRB.TN.GOV.IN -இல் தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம். ஒரு காலிப்பணியிடத்துக்கு 5 பேர் வீதம் 7,414 பேர் உடல் தகுதி தேர்வுக்கு தேர்வாகி உள்ளனர்.

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு பிப்ரவரி 24 - மார்ச் 2 வரை உடல் தகுதித்தேர்வு நடைபெற உள்ளது. உடல் தகுதி மற்றும் எழுத்து தேர்வு அடிப்படையில் அடுத்த கட்ட தேர்வுக்கு தேர்வர்கள் அழைக்கப்படுவார்கள். அதவாது நேர்முகத்தேர்வு நடைபெறும். இதற்கு 10 மார்க் வழங்கப்படும்.

இந்த மூன்று கட்ட தேர்வுகளுக்கு பிறகு இறுதி மெரிட் லிஸ்ட் வெளியாகும். அதன்பிறகு மெடிக்கல் சான்றிதழ் பரிசோதனைக்கு பிறகு எஸ்.ஐ பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும்.

இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியாகி, பல்வேறு நகரங்களிலும் உடல் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த சூழலில்தான், எஸ்.ஐ தேர்வர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+