அமலுக்கு வந்தது புதிய பென்சன் முறை.. ஆனால் ஒருமுறை மட்டும்தான் மாற முடியும்.. அரசு ஊழியர்கள் செக்
சென்னை: மத்திய நிதி அமைச்சகம், புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் (UPS) இருந்து தேசிய ஓய்வூதிய அமைப்புக்கு (NPS) ஒருமுறை மட்டுமே மாறும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி, ஓய்வுபெறுவதற்கு ஒரு வருடம் முன்னதாகவோ அல்லது விருப்ப ஓய்வுக்கு மூன்று மாதங்கள் முன்னதாகவோ வரை கிடைக்கும். அதாவது நாளை ஓய்வுபெற போகிறீர்கள் என்றால்.. இன்று நீங்கள் ஓய்வூதிய முறையை மாற்ற முடியாது.
ஓய்வுபெறுவதற்கு ஒரு வருடம் முன்னதாகவோ அல்லது விருப்ப ஓய்வுக்கு மூன்று மாதங்கள் முன்னதாகவோ நீங்கள் மாற்றலாம்.. அல்லது இதற்கும் முன்கூட்டியே மாற்றிக்கொள்ளலாம். மேலும் 1 முறை பென்ஷன் முறையை மாற்றினால் மீண்டும் மீண்டும் மாற்ற முடியாது.

மத்திய அரசு ஊழியர்கள் பென்ஷன்
பணி நீக்கம், பணி நீக்கம் அல்லது ஒழுங்குமுறை நடவடிக்கை போன்றவற்றை எதிர்கொள்ளும் ஊழியர்களுக்கு இந்த வசதி பொருந்தாது. ஒருமுறை இந்த மாற்றம் செய்யப்பட்டால், ஊழியர்கள் யுபிஎஸ் திட்டத்தின் கீழ் கிடைக்கும் உறுதியான பலன்களுக்கு இனி தகுதியற்றவர்கள் ஆவார்கள். அரசு வழங்கும் 4% வேறுபட்ட பங்களிப்பு, வெளியேறும் நேரத்தில் தனிநபரின் என்.பி.எஸ் கணக்கில் சேர்க்கப்படும்.
சமீபத்தில் அமலுக்கு வந்த யூனிஃபைட் பென்ஷன் திட்டம் (UPS) பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு ஊழியர்கள் பெரும்பாலும் இதில் இணையவில்லை. அமலுக்கு வந்து 2 வாரம் ஆகியும் யாரும் பெரிதாக இதில் இணைய ஆர்வம் காட்டவில்லை என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு 2024 ஆம் ஆண்டில் யூனிஃபைட் பென்ஷன் திட்டத்தை (UPS) அறிமுகப்படுத்தியது. ஓய்வூதியப் பாதுகாப்பிற்கு இது ஒரு புரட்சிகரமான திட்டமாகப் பார்க்கப்பட்டது. தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கு (NPS) மாற்றாக வடிவமைக்கப்பட்ட UPS, அரசு ஊழியர்களுக்கு NPS வழங்க முடியாத ஒரு விஷயத்தை அளிப்பதை நோக்கமாகக் கொண்டது.. அது வாழ்நாள் முழுவதும் உத்தரவாதமான மாதாந்திர ஓய்வூதியம். இதனால் யூனிஃபைட் பென்ஷன் திட்டம் (UPS) பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது
மத்திய அரசு ஊழியர்களுக்காக அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (யுபிஎஸ்) தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது.
இது முன்பு அமலில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டம் (ஓபிஎஸ்) மற்றும் தற்போது அமலில் உள்ள தேசிய ஓய்வூதியத் திட்டம் (என்பிஎஸ்) ஆகிய இரண்டின் முக்கிய அம்சங்களை ஒருங்கே உள்ளடக்கியது. சரி இந்த பென்சன் முறையில் பென்சன் எப்படி கணக்கிடப்படும்.. உங்களுக்கு எவ்வளவு பென்சன் வரும் என்று தெரிய வேண்டுமா? மேற்கொண்டு படியுங்கள். ஊழியர் செலுத்த வேண்டிய பங்களிப்பு, ஓய்வூதியத்தைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் பார்முலா மற்றும் அதிக பென்சன் பெறுவதற்கான தகுதிகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை அரசு இன்னும் வெளியிடவில்லை.
புதிய பென்சன்: ஓய்வூதியம் பெற குறைந்தபட்ச சேவை காலம்:
குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரை சேவை செய்திருந்தால் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும். UPSல் உறுதிப்படுத்தப்பட்ட அதிக ஓய்வூதியம் பெற 25 வருடங்கள் வேலை செய்ய வேண்டும். ஓய்வுபெறுவதற்கு முந்தைய 12 மாதங்களில் பெறப்பட்ட சராசரி அடிப்படை ஊதியத்தின் 50% வழங்கப்படும்.
புதிய பென்சன்: ஓய்வூதியத்தை எப்படி கணக்கிடுவது?:
1. 10 ஆண்டுகளுக்கும் குறைவான சேவைக் காலம்: பணி ஓய்வு நேரத்தில், பணியாளருக்கு ஏதேனும் ஊதியம் வழங்கப்படுமா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். இது தொடர்பான விளக்கம் எதுவும் இல்லை.
2. சேவைக் காலம் 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமாக ஆனால் 25 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால்: பணியாளர் விகிதாசார ஓய்வூதியத்திற்கு.. அதாவது குறைந்தபட்ச ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவராக இருக்கலாம். யுபிஎஸ் திட்டமானது குறைந்தபட்சம் 10 வருட சேவைக்குப் பிறகு ஓய்வுபெறும் போது மாதம் ஒன்றுக்கு ரூ.10,000 என்ற உறுதியான ஓய்வூதியத்தை வழங்குகிறது.
மேற்கண்ட ஓய்வூதியம் பின்வருமாறு கணக்கிடப்படும்: கடந்த 12 மாதங்களுக்கான சராசரி மாத அடிப்படை ஊதியம் x 50% x வேலை பார்த்த வருடங்களின் எண்ணிக்கை) / 25 ஆண்டுகள்.
புதிய பென்சன் திட்டம் - கவனிக்க வேண்டிய விஷயம்
3. அதுவே 25 வருடங்களுக்கு மேல் பணியாற்றி இருந்தால் அதில் ஓய்வூதியம் எளிதாக கணக்கிடலாம். இதில் பணியாளரின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமானது கடந்த 12 மாதங்களின் சராசரி மாத அடிப்படை ஊதியத்தில் 50% ஆக இருக்கும். அதைக் கணக்கிடுவதற்கான பார்முலா: கடந்த 12 மாதங்களுக்கான சராசரி மாத அடிப்படை ஊதியம் x 50%.
ஒருங்கிணைந்த பென்சன் - வரவேற்பு இல்லை
இருப்பினும், இந்தத் திட்டத்திற்கான வரவேற்பு மந்தமாகவே உள்ளது. ஜூலை 20, 2025 நிலவரப்படி, NPS இல் பதிவுசெய்யப்பட்ட சுமார் 23 லட்சம் ஊழியர்களில் 30,989 பேர் மட்டுமே UPS ஐத் தேர்ந்தெடுத்துள்ளனர். இது வெறும் 1.35% மட்டுமே.
NPS - UPS பென்ஷன் முறை
UPS சில உண்மையான பலன்களைக் கொண்டுள்ளது, ஆனால் ஊழியர்கள் தயங்குவதற்கு சில காரணங்கள் உள்ளன. இதில் வரிகள் குறித்த தெளிவின்மை உள்ளது. ஓய்வுக்குப் பிறகு தங்கள் ஓய்வூதியம் அல்லது மொத்தப் பணம் எப்படி வரி விதிக்கப்படும் என்று மக்களுக்குத் தெரியவில்லை.
NPS ஊழியர்களுக்கு தங்கள் பணத்தை எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பதைத் தேர்வு செய்ய அனுமதிக்கிறது, இது அதிக வருமானத்திற்கான வாய்ப்பை வழங்குகிறது. ஆனால், UPS முதலீடுகள் மீது குறைந்த கட்டுப்பாட்டையே வழங்குகிறது. இளம் ஊழியர்கள் பெரும்பாலும் NPS ஐ விரும்புகிறார்கள்.
இதன் காரணமாகவே மத்திய அரசு ஊழியர்கள் பெரும்பாலும் இதில் இணையவில்லை. அமலுக்கு வந்து 2 வாரம் ஆகியும் யாரும் பெரிதாக இதில் இணைய ஆர்வம் காட்டவில்லை என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications