நாடு முழுக்க பென்சன் பெறுபவர்களுக்கு.. வெளியான முக்கிய அறிவிப்பு.. ஆட்டத்தை மாற்றும்.. மத்திய அரசு!
டெல்லி: இந்தியாவின் ஓய்வூதியத் துறை சீராக்கும் அமைப்பு (PFRDA), ஊழியர்களுக்கு சிறந்த பென்சன் வருவாயைப் பெற்றுத்தரும் நோக்கில், தனியார் ஓய்வூதிய நிதி நிறுவனங்களுக்கான முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. அதாவது இப்போது ஊழியர்களின் ஓய்வூதிய பணம் குறிப்பிட்ட சில நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்யப்படுகிறது. இதை பல இடங்களில் பிரித்து முதலீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி பரிமாற்ற நிதி (ETF), துணிகர மூலதன நிதி (Venture Capital Funds), தனியார் கடன் மற்றும் மாற்று முதலீட்டு நிதிகள் (AIFs) போன்றவற்றில் ஓய்வூதிய நிதிகள் முதலீடு செய்ய PFRDA பரிசீலித்து வருவதாக அதன் தலைவர் எஸ். ராமன் தெரிவித்து உள்ளார்.

ஓய்வூதியம் முதலீடு
சந்தைப் பத்திரங்கள் மூலம் மக்களுக்கு நல்ல வருமானம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என ராமன் வலியுறுத்தினார். இதனால் தற்போது குறிப்பிட்ட சில அமைப்புகளில் மட்டுமே முதலீடு செய்யப்படுகிறது. அது மாற்றப்பட்டு முதலீடுகள் வேறு வேறு துறைகளுக்கு மாற்றப்படும். இதனால் அதிக ரிட்டர்ன் கிடைக்கும்.
தற்போது, ஓய்வூதியத் திட்டங்கள் பெரும்பாலும் கடன் பத்திரங்கள் மற்றும் பங்குச் சந்தையில் மட்டுமே முதலீடு செய்கின்றன. இதை மாற்ற முடிவு செய்துள்ளோம். தனியார் ஓய்வூதிய நிதித் துறையின் மொத்த சொத்து மதிப்பு ₹15.78 டிரில்லியன் ($178.77 பில்லியன்) ஆகும். இது 80 மில்லியன் சந்தாதாரர்களுக்கு சேவை செய்கிறது. 2030-ஆம் ஆண்டுக்குள் சந்தாதாரர் எண்ணிக்கையை 300 மில்லியனாக உயர்த்த PFRDA இலக்கு நிர்ணயித்துள்ளது.
தற்போது 11 நிதி நிறுவனங்கள் ஓய்வூதியத் தயாரிப்புகளை வழங்குகின்றன. பஜாஜ் ஃபைனான்ஸ், பாங்க் ஆஃப் பரோடா போன்ற பல நிறுவனங்கள் இந்தத் துறையில் நுழைய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இது போக ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ள நிலையில், இனி மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் முறை வர வாய்ப்பே இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் மற்றும் உறுதியளிக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியத்திற்கு வழி ஏற்படுத்தும் விதமாக ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (யுபிஎஸ்) மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி கொண்டு வந்தது. பென்ஷன் திட்டத்தில் பெரிய அளவில் இதன் மூலம் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
இனி பழைய பென்சன் முறை வர வாய்ப்பே இல்லை
ஒருங்கிணைந்த பென்ஷன் முறை வந்துள்ளதால், இனி பழைய பென்சன் முறை வர வாய்ப்பே இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன் பயன்கள் சில தற்போது வந்துள்ள ஒருங்கிணைந்த பென்ஷன் முறையில் இருந்தாலும்.. பழைய பென்ஷன் முறை முழுமையாக இனி அமலுக்கு வராது. புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும் மற்றும் அரசாங்கம் 14% பங்களிக்க வேண்டும். இதை அரசு முதலீடு செய்யும். இறுதியில் அந்த முதலீட்டு கார்பஸின் சந்தை வருவாயைப் பொறுத்து கடைசி கட்ட பென்சன் தீர்மானிக்கப்படும்.
அதுவே பழைய ஓய்வூதிய முறையானது ஒரு பணியாளரின் கடைசி ஊதியத்தில் 50% என்னவோ.. அந்த அளவிற்கு நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளித்தது. இப்போது புதிய முறையால் கடைசி ஊதியத்தில் 38- 42% என்னவோ.. அந்த அளவிற்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது. தற்போது உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும். இந்த பழைய ஓய்வூதிய திட்டம் கண்டிப்பாக அமலுக்கு வராது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம்
யுபிஎஸ் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களிலிருந்து சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுவார்கள் என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்திற்கு சமமான இந்த முழு ஓய்வூதியத்திற்கு தகுதி பெற, ஊழியர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியை முடித்திருக்க வேண்டும்.
அடுத்த நிதியாண்டிலிருந்து, தேசிய ஓய்வூதியத் திட்ட சந்தாதாரர்கள், உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியத்தை வழங்கும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) மாறுவதற்கான ஆப்ஷன் வழங்கப்படும். புதிய ஓய்வூதியம், யுபிஏ இரண்டில் ஒன்றை அவர்கள் தேர்வு செய்யலாம். யுபிஎஸ் ஓய்வூதிய திட்டத்தில்.,. புதிய ஓய்வூதிய திட்டத்தை விட அதிக பென்ஷன் கிடைக்கும்.
'ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கும்' 'தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கும்' உள்ள வித்தியாசம்:
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஓய்வு பெற்றவர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியை முடித்திருந்தால், கடைசி 12 மாத சேவையின்சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுகிறார்கள். 10 முதல் 25 ஆண்டுகள் பணிபுரிபவர்களுக்கு, அவர்களின் பணிக்காலத்துக்கு ஏற்றவாறு ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த புதிய திட்டம் கடந்த ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வந்தது. மார்ச் 31, 2025க்குள் ஓய்வு பெறுபவர்களுக்கு இந்தத் திட்டத்தின் பலன்கள் பொருந்தும்.












Click it and Unblock the Notifications