Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிகிரி முடிச்சிருந்தால் போதும்.. மத்திய அரசு வேலை.. 323 பணியிடங்கள்.. அழைப்பு உங்களுக்கு தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: EPFO எனப்படும் மத்திய அரசின் தொழிலாலர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் காலியாகவுள்ள 323 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் காலியாக உள்ள 323 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய பணியாளர் தேர்வு ஆணையமான யுபிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்காலம். வயது வரம்பு என்ன? உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

UPSC EPFO Recruitment Personal Assistant Posts how to Apply full details

பணியிடங்கள் விவரம்: நேர்முக உதவியாளர் என்ற பணியில் மொத்தம் 320 பேர் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணியிடத்திற்கான கல்வி தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருந்தால் போதும். தட்டச்சு தெரிந்து இருக்க வேண்டும். ஆங்கிலம் அல்லது தமிழில் ஒரு நிமிடத்தில் 120 வார்த்தைகள் அடிக்க வேண்டும். கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தேர்வு அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு: 18 - வயது நிரம்பியவர்களும் 30 வயதுக்கு மிகாதவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. ஒபிசி பிரிவினர் 18 முதல் 33 வயது வரையும், எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் 18 முதல் 35வயது வரையும் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் 18 முதல் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வை பொறுத்தவரை நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும். தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய நகரங்களில் நடைபெறும். புதுவையிலும் தேர்வு நடைபெறும்.

தேர்வு கட்டணம்: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலம். விண்ணப்ப கட்டணமாக ரூ. 25 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி/ எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. ஆன்லைன் மூலமாக மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பிக்க வரும் 27. 03. 2024 கடைசி நாள் ஆகும். எழுத்து தேர்வு வரும் 07. 07. 2024 நடைபெறும். தேர்வு அறிவிப்பினை படிக்க https://upsc.gov.in/sites/default/files/AdvtNo-51-2024-Spcl-PrsnAsst-engl-070324.pdf என்ற இணையதளத்தை கிளிக் செய்யவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+