மத்திய அரசு பணி வேண்டுமா? ரயில்வேயில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு! வெளியான மேஜர் அறிவிப்பு
சென்னை: மேற்கு மத்திய ரயில்வேயில் உதவி லோகோ பைலட், டெக்னீசியன் கிரேட் III, ஜூனியர் என்ஜினீயர், ட்ரெயின் மேனேஜர் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 424 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்தியாவில் ஏழை, நடுத்தர மக்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய ரயிலை தான் தேர்வு செய்கின்றனர். குறைந்த கட்டணம், நல்ல வசதி உள்ளிட்டவற்றால் ரயில்வே துறைக்கு என்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் தான் இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்காக ரயில்வே துறை உள்ளது.

ரயில்வே துறை நிர்வாக காரணங்களுக்காக தனித்தனி மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 18 மண்டலங்கள் உள்ளன. இதில் ஒன்று தான் மேற்கு மத்திய ரயில்வே மண்டலம். இது மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் மேற்கு மத்திய ரயில்வேயில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி மேற்கு மத்திய ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணிக்கு 279 பேர், டெக்னீசியன் III பணிக்கு 81 பேர், ஜூனியர் என்ஜினீயர் பரிவுக்கு 38 பேர், Train Guard/Train Manager பணிக்கு 26 பேர் என மொத்தம் 424 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பம் செய்வோர் பொதுப்பிரிவினராக இருந்தால் 18 வயது முதல் 42 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினராக இருந்தால் 18 வயது முதல் 45 வயதுக்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 18 வயது முதல் 47 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 01.01.2024 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
அசிஸ்டென்ட் லோகோ பைலட் மற்றும் டெக்னீசியன் கிரேட் III பணிக்கு ரூ.19,900, ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு ரூ.35,400, டிரெய்ன் மேனேஜர் பணிக்கு ரூ.29,200 முதல் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 10, 12, ஐடிஐயில் வெவ்வேறு படிப்புகள், டிப்ளமோ என்ஜினீயரிங் படிப்பை முடித்தவர்கள், டிகிரி படித்திருப்பதோடு மேற்கு மத்திய ரயில்வேயில் ரெகுலர் எம்பிளாயாக இருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் வரும் செப்டம்பர் மாதம் 2ம் தேதிக்குள் www.rrcmas.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் Computer Based Test, Aptitude Test மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான கூடுதல் விபரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
இந்தியன் வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை.. 350 பணியிடங்கள்.. பிஇ முடித்தவங்களுக்கு ஜாக்பாட் -
IT Jobs: சென்னை - பெங்களூர் உள்பட 3 இடங்களில் நாளை இண்டர்வியூ.. TCS-யில் காலிப்பணியிடங்கள் -
IT JOBS: 2026ல் படிப்பை முடித்தோருக்கு ஜாக்பாட்.. அலோவன்ஸ் + சம்பளத்துடன் வேலை தரும் Cognizant -
CRPF Job: மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! 69 ஆயிரம் சம்பளம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications