மத்திய அரசு பணி வேண்டுமா? ரயில்வேயில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு! வெளியான மேஜர் அறிவிப்பு
சென்னை: மேற்கு மத்திய ரயில்வேயில் உதவி லோகோ பைலட், டெக்னீசியன் கிரேட் III, ஜூனியர் என்ஜினீயர், ட்ரெயின் மேனேஜர் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 424 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்தியாவில் ஏழை, நடுத்தர மக்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய ரயிலை தான் தேர்வு செய்கின்றனர். குறைந்த கட்டணம், நல்ல வசதி உள்ளிட்டவற்றால் ரயில்வே துறைக்கு என்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் தான் இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்காக ரயில்வே துறை உள்ளது.

ரயில்வே துறை நிர்வாக காரணங்களுக்காக தனித்தனி மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 18 மண்டலங்கள் உள்ளன. இதில் ஒன்று தான் மேற்கு மத்திய ரயில்வே மண்டலம். இது மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் மேற்கு மத்திய ரயில்வேயில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி மேற்கு மத்திய ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணிக்கு 279 பேர், டெக்னீசியன் III பணிக்கு 81 பேர், ஜூனியர் என்ஜினீயர் பரிவுக்கு 38 பேர், Train Guard/Train Manager பணிக்கு 26 பேர் என மொத்தம் 424 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பம் செய்வோர் பொதுப்பிரிவினராக இருந்தால் 18 வயது முதல் 42 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினராக இருந்தால் 18 வயது முதல் 45 வயதுக்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 18 வயது முதல் 47 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 01.01.2024 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
அசிஸ்டென்ட் லோகோ பைலட் மற்றும் டெக்னீசியன் கிரேட் III பணிக்கு ரூ.19,900, ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு ரூ.35,400, டிரெய்ன் மேனேஜர் பணிக்கு ரூ.29,200 முதல் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 10, 12, ஐடிஐயில் வெவ்வேறு படிப்புகள், டிப்ளமோ என்ஜினீயரிங் படிப்பை முடித்தவர்கள், டிகிரி படித்திருப்பதோடு மேற்கு மத்திய ரயில்வேயில் ரெகுலர் எம்பிளாயாக இருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் வரும் செப்டம்பர் மாதம் 2ம் தேதிக்குள் www.rrcmas.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் Computer Based Test, Aptitude Test மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான கூடுதல் விபரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
job: தமிழக அரசின் சுற்றுலாத் துறையில் வேலை வாய்ப்பு.. என்ஜினியரிங் முடித்தவர்களுக்கு வாய்ப்பு! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது












Click it and Unblock the Notifications