ஜோஹோ ஐடி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு.. சென்னையில் இண்டர்வியூ + பணி.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் ஜோஹா நிறுவனத்தில் இருந்து சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான இண்டர்வியூ என்பது சென்னையில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து பயன் பெறலாம்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ விளங்கி வருகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட இடங்களில் ஜோஹோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பு என்பது வெளியாகி வருகிறது. அந்த வகையில் புதிய பணி பற்றிய விபரம் வருமாறு:
ஜோஹோ நிறுவனத்தில் தற்போது சாப்ட்வேர் டெவலப்பர் பிரிவில் Back end Developer ரோல் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஜாவா, பைத்தான் தெரிந்து சம்பந்தப்பட்ட பிரிவில் 4 முதல் 7 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிககு 2025ம் ஆண்டில் கல்லூரி படிப்பை முடிப்பவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம்.
தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளது. கடைசி கட்ட இண்டர்வியூவின் சம்பளம் பற்றிய விபரம் என்பது தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜோஹோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே பணியை விரும்புவோர் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். இண்டர்வியூ என்பது சென்னையில் நடைபெற உள்ளது. அதேபோல் பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணி பற்றிய அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications