ஜோக்ஸ் - 'தல' ரசிகனை கலாய்த்த காது கேக்காத மூதாட்டி!
சென்னை: பரபரப்புகளும், சோகங்களும், இலக்குகள், மன அழுத்தங்களும் நிறைந்த இந்த உலகத்தில் நம் மனதை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க சிரிப்பு முக்கியம். அதை ஏற்படுத்தும் நகைச்சுவையை தான் இந்த ஜோக்ஸ் தொகுப்பின் மூலம் நாம் வழங்குகிறோம்.
கடி நம்பர் 1:
ஒரு சிறுவன் வீட்ல தும்மிக்கிட்டே இருந்தானாம்.. அம்மாக்கு ஒரே கவலை! என்ன செஞ்சு பார்த்தும் தும்மல் நிக்கவே இல்ல... ஆஸ்பத்திரிக்கு போய் டாக்டர்கிட்ட காட்டியும் பிரயோஜனம் இல்லன்னு புலம்பிட்டே இருந்தாங்க!
அதை பார்த்த பக்கத்துக்கு வீட்டு அக்கா, உன் பையன் ஏன் இப்டி தும்மிக்கிட்டே இருக்கான்னு எனக்கு தெரியும்னு சொல்ல, அப்டியா உடனே சொல்லுக்கான்னு ஆர்வமா கேட்டாங்க அம்மா..
அவன், "பொடி" பையன் டி அதான் தும்மிட்டே இருக்கான்னு ஒரு கடியை போட்டாங்க... அதிர்ச்சில அந்த பையனுக்கே தும்மல் நின்னுருச்சாம்.. நல்லவேளை வேற எதுவும் ஆகல.
கடி நம்பர் 2:
ஆமா, அந்த புத்துக்குள்ளேயே கிடக்குதே.. அந்த பாம்புக்கு என்ன நோயாம்?
அதுவந்து "புற்று"நோயாம் தம்பி...
கடி நம்பர் 3:
ஆண்டி.. உங்க மருமகளுக்கு என்னாச்சு..?
வாயில ஆப்பரேசன் கண்ணு..
அப்படியா ஏன்..
வாய் கிழிய பேசுறா, அதான் தையல் போட்டாச்சு..
கடி நம்பர் 4:
தல ரசிகன்: என்னுடைய வாழ்கையில ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா..
காது கேளாத கிழவி: ஏன், தம்பி நீங்க சிற்பியா?
கடி நம்பர் 5:
மாணவன்: சார்.. சார் உங்க கிட்ட ஒரு ஜோக் ஒன்னு கேட்கனும்.. கேட்கட்டுமா?
ஆசிரியர்: நல்ல மூட்ல இருக்கேன்.. இப்பவே கேளு..
மாணவன்: ஒரு யானை ஸ்வீட் வாங்குறதுக்காக பேக்கரிக்கு வேகமா ஓடிப்போனுச்சு.. முதல்ல யானை என்ன வாங்கி இருக்கும்?
ஆசிரியர்: நீதான் கேள்விலயே பதில் சொல்லிட்டியே... ஸ்வீட்தான் வாங்கி இருக்கும்.
மாணவன்: வேகமா ஓடிப்போனுச்சுல.. அப்போ முதல்ல மூச்சு தான வாங்கி இருக்கும். இதுக்கூட தெரியாதா சார்..
ஆசிரியர்: என்னடா இன்னைக்கு எதுவும் நடக்கலயேன்னு பார்த்தேன்.. நடத்திட்ட, சந்தோசமா?
கடி நம்பர் 6:
செந்தில்: அண்ணே விசயம் தெரியுமா?
மணி: சொன்னா தானடா தெரியும்?
செந்தில்: பழம் நழுவிப் பாலில் விழுந்து கிளாஸ் உடைஞ்சு போச்சுண்ணே!
மணி: அது எப்டி உடையும்..?
செந்தில்: பலாப்பழம் விழுந்தா உடையாம என்ன பன்னும்
மணி: உன் குசும்பு அதிகமா போச்சு.. இரு வெச்சுக்கிறேன்.