காரோட போன மனைவியை காணோம் இன்ஸ்பெக்டர்!
சென்னை: பரத் என்ற அந்த நடுத்தர வயது தொழிலதிபர், கார் ஓட்டிச் சென்ற தனது மனைவியை காணவில்லை என போலீசில் புகார் கொடுக்க வருகிறார்.
அப்போது பரத்துக்கும், இன்ஸ்பெக்டருக்கும் நடந்த உரையாடல் இதுதான்.
பரத்: காரை எடுத்துக்கொண்டு ஷாப்பிங் போகிறேன் என கூறிவிட்டு எனது மனைவி கிளம்பி சென்றவர்தான்.., இன்னும் வீட்டுக்கு திரும்பவில்லை.
இன்ஸ்பெக்டர்: உங்க மனைவியின் உயரம் என்ன?
பரத்: நான் அளந்து பார்த்தது கிடையாது.
இன்ஸ்பெக்டர்: முடி கலர் எப்படி இருக்கும்?
பரத்: அது சீசனுக்கு தக்கபடி மாற்றிக்கொள்ளப்படும்.
இன்ஸ்பெக்டர்: மச்ச அடையாளங்கள் ஏதாவது சொல்லுங்கள், அவர் என்ன கலர் டிரஸ் போட்டுக்கொண்டு வெளியே போனார்?
பரத்: மச்சத்தை கவனித்தது இல்லை, வெளியே போகும்போது, மஞ்சையோ, பச்சையோ ஒரு கலரில் ஆடை அணிந்திருந்தார்.
இன்ஸ்பெக்டர்: அவர் காரை, ஓட்டுவாரா, என்ன கலர் காரில் வெளியே போனார்?
பரத்: கார் ஓட்டுவார். அவர் போனது ஆடி ஏ8 கருப்பு வண்ண கார். 3.0 லிட்டர் வி6 இன்ஜின், 333 குதிரை சக்தி வெளிப்படுத்த கூடியது. எல்இடி லைட் வசதி கொண்ட கார். காரின் முன்பக்க இடது கதவின் ஒரு ஓரத்தில், சிறு சிராய்ப்பு இருக்கும். இவ்வாறு கூறிய பரத், தேம்பி அழ ஆரம்பித்தார்.
இன்ஸ்பெக்டர்: கவலைப்படாதீங்க சார். உங்க காரை எப்படியும் கண்டுபிடித்து தந்துவிடுகிறோம்.