Joke: மழையில் வடை சாப்பிடுங்க பாஸ்.. லிவருக்கு நல்லதாம்!
சென்னை: நவம்பர், டிசம்பர் வந்தாலும் வந்தது, தமிழகம் முழுக்க மழையை பற்றிய பேச்சுதான். இப்போ புயலும் சேர்ந்தாச்சு. அப்புறம் என்ன, குடையும் கையுமாக சுத்திக் கொண்டு இருக்கிறார்கள் நம்மாட்கள்.
ஆனால், மழைக்கு இதமாக, நம்ம ராமுக்கு வடை சாப்பிட ஆசை வந்தது. சுடச் சுட வடை.. இன்னொரு கையில், காபி இல்லைன்னா தேனீர்.. நினைச்சி பார்க்கவே, ஜிவ்வுன்னு இருந்தது ராமுக்கு.
ஆனா, உடம்பு முழுக்க ஓவரா கொலஸ்ட்ரால்.. வாயை கட்டவும் முடியல.. ஒய்ப், பிரேமா கிட்ட வாய் விட்டு கேட்கவும் முடியல.. எப்படியோ ராத்திரியெல்லாம் யோசிச்சி, ஒரு ஐடியாவோட அடுத்த நாளே பிரேமாகிட்ட 'பிட்டை' போட்டார் ராமு. இதோ அவுங்க உரையாடல்.
ராமு: ஏம்மா.. பிரேமா.. மழைக்கு சுடச் சுட நல்ல காரமா வடை போடேன்
பிரேமா: உங்க மண்டையிலதான் ரெண்டு போடனும், அதெல்லாம் எண்ணைங்க, வேண்டாம்.
ராமு: எது.. எண்ணை நல்லது இல்லையா. அப்போ தண்ணீர் குடிச்சா மட்டும் நல்லதா?
பிரேமா: இது என்ன கேனத்தனமா ஒரு கேள்வி. தண்ணீர் ஈஸியா ஜீரணமாகும், நல்லதுதான்.
ராமு : (நம்பிக்கையோடு): இப்போ, தண்ணீர்ல எண்ணெய் சேர்ந்தா என்னாகுது?
பிரேமா: தண்ணீர்ல எண்ணை மிதக்கும்.
ராமு: அப்போ.. எண்ணெய் தண்ணீரை விட லகுவான பொருள்தான.
பிரேமா (குழப்பத்தோடு): அப்படித்தாங்க தெரியுது
ராமு: அப்போ அந்த எண்ணையில மிதக்குற வடை எவ்வளவு லகுவானது. ஜீரணத்துக்கு ஈஸியாதான இருக்கும். இது தெரியாம பேசுறியே.. போ, போ. போய் வடை சட்டியை எடுத்து அடுப்புல வை டார்லிங். (ராமு மைண்ட் வாய்ஸ்- அப்பாடா, எப்படியோ வாய்லயே வடை சுட்டு, வடைக்கு ரெடி பண்ணியாச்சு)