டிசைன் பிடிக்கலனு சொல்லிட்டா யுவர் ஆனர்....!
ஜவுளிக்கடை கதவை உடைத்து திருடியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டான் குற்றவாளி.
நீதிபதியும், குற்றவாளியும் பேசிக் கொள்வதைப் பாருங்கள்....

நான் திருடன் தான்....
நீதிபதி: திருட்டை ஒத்துக் கொள்கிறாயா...?
திருடன்: ஆமாம் யுவர் ஆனர்...

தெளிவு படுத்து....
நீதிபதி: உனக்கு சிறைத் தண்டனை அளிப்பதற்கு முன் நீ ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்து...
திருடன்: கூறுங்கள் யுவர் ஆனர்...

எஸ் யுவர் ஆனர்....
நீதிபதி: நீ அடுத்தடுத்து 3 கடைகளை உடைத்து திருட முயன்றதாக உன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அது உண்மையா..?
திருடன்: ஆமாம் யுவர் ஆனர்...

மூன்று கடை.. ஒரு டிரஸ்
நீதிபதி: எதற்காக மூன்று கடைகளில் திருட முற்பட்டாய்... அப்படி எத்தனை உடைகளைத் திருடினாய்...?
திருடன்: ஒன்றே ஒன்று தான் திருடினேன்...

ஒரு டிரஸ் தானா...?
நீதிபதி: ( ஆச்சர்யத்துடன்...) மூன்று கடைகளை உடைத்தும் ஒரே ஒரு உடை தான் திருடினாயா...?
திருடன்: ஆமாம்...

என்ன கொடுமைச் சார் இது....
நீதிபதி: ஏன்..?
திருடன்: ஒவ்வொரு கடையா புகுந்து ஒவ்வொரு டிரஸ்ஸா செலக்ட் பண்ணி கொண்டு போய் என் மனைவி கிட்ட காண்பிச்சேன்... ஆனா, அவளுக்கு 3வது கடையில் எடுத்த டிரஸ் தான் புடிச்சிருந்துச்சாம் யுவர் ஆனர்....












Click it and Unblock the Notifications