குழந்தை நீதி கதைகள்: இக்கரைக்கு அக்கரை பச்சை.. எல்லை தாண்டிய பிரட்மேன்
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டிஸ், எப்படி இருக்கீங்க.. உங்களுக்கு ஒரு பிரட்மேனோட ஒருநாள் வாழ்க்கையை தான் கதையா சொல்ல போறேன். அதனால படிச்சிட்டு சந்தோசமா இருங்க.
நல்ல ஆற்றின் கரையோரமா நிறைய மாடுகள், குதிரைகள் என வளர்த்து வரும் வயதான தம்பதிகள். ஆற்றின் மறு கரையில் அடர்ந்த காடும் இருந்தது. காலையில் அந்த வயதான பாட்டி கொஞ்சமாக மாவை எடுத்து பிசைந்து நல்ல உருண்டையாக உருட்டினார். பின்னர் அதை ஒரு டெட்டி பொம்மை போல உருட்டி செய்தார். அதன் மேல் நட்ஸை வைத்து கண்கள் போல செய்தார். உலர்ந்த திராட்சை எடுத்து அதற்கு சட்டை பட்டன் போல ஒட்டி வைத்தார்.

அதை எடுத்து ஓவெனில் வைத்தார். கொஞ்ச நேரம் அது வெந்ததா என பார்த்து கொண்டிருந்த தம்பதிகள், அந்த வயதான தாத்தா அது தயாராகிவிட்டது என ஓவெனை திறந்தார். அவ்வளவுதான் அந்த டெட்டி பிரீட்மேன் துள்ளி குதித்து ஓடியது. தம்பதிகள் துரத்தி பிடிக்க முயன்றனர்.
டெட்டி பிரெட்மேன், 'ஆகா நான் ஒரு டெட்டி, என்னை பிடிக்க முடியாது.. இங்கிருந்து ஓடிப்போறேன், காட்டுக்குள்ள வாழபோறேன்' என பாட்டு படி கொண்டே ஓடியது.
அந்த வயதான தம்பதிகள் அதை கூப்பிட கூப்பிட அது பாடி கொண்டே மாடுகள் இருக்கும் கூட்டத்துக்குள் ஓடியது. அந்த மாடுகளின் கால்கள் இடையில் அங்கும் இங்கும் ஓடியது அந்த டெட்டி. மேலும் 'ஆகா நான் ஒரு டெட்டி, என்னை பிடிக்க முடியாது.. இங்கிருந்து ஓடிப்போறேன், காட்டுக்குள்ள வாழபோறேன்' என பாட்டு படி கொண்டே ஓட மாடுகளும் அதை பிடிக்க முயன்றன.
அங்கிருந்து தப்பித்து ஓட, குதிரைகள் கூட்டத்துக்குள் சிக்கியது டெட்டி. அதை பிடிக்க குதிரைகள் முயல, அந்த வயதான பாட்டி கையில் பிடிக்க முயன்றார். லாவகமாக அங்கிருந்து தப்பித்து ஆற்றின் முனையை அடைந்தது. அவவ்ளவுதான் இதை கடக்க வேண்டுமே இல்லையென்றால் மூழ்கி கரைந்து விடுவோமே என யோசிக்க, அந்த கறியில் ஒரு உருவம் டெட்டி பிரெட்மேன் கண்ணில் பட்டது.
அந்த கரையில் இருந்து கேட்ட அந்த குரல், நான் உன்னை காப்பாற்றி மறு கரையில் விடுகிறேன் என்றது. டெட்டி குஷியாகி வா, வா என்றது. மீண்டும் அந்த பாடலை பாட தொடங்கியது. 'ஆகா நான் ஒரு டெட்டி, என்னை பிடிக்க முடியாது.. இங்கிருந்து ஓடிப்போறேன், காட்டுக்குள்ள வாழபோறேன்'. டெட்டியை கிட்ட நெருங்கியது யாருன்னு பார்த்த அது ஒரு நரி.

டெட்டிக்கு சிறு பதட்டம் இருந்தாலும், நரி வாலில் ஏற சொன்னதும் ஏறியது. அப்படியே நரி சொன்னது என் வால் உன்னை தாங்கும் அளவுக்கு பலமாக இல்லை நீ முதுகில் ஏறி கொள் என்றது. நரி சொன்னதை செய்தது டெட்டி. ஆற்றில் நீர் அதிகமாகிறது, அதனால் என் தலையில் ஏறு என்றது நரி. நரி எதோ தந்திரம் செய்கிறதோ என எண்ணிய டெட்டி தப்பித்தால் போதும் என தலையில் ஏறியது.
கரையை நெருங்க, நெருங்க டெட்டிக்கு பதட்டமும் அதிகரித்தது. நரி டெட்டி பிரேட்மேனை முழுங்க தயாரானது. கரை வரவும் டெட்டி அதன் தலையில் இருந்து குதிக்க நரி வாயை திறக்க சரியாக இருந்தது. டெட்டி பிரீட்மேனை வாயில் போட்டு மென்னியது நரி.












Click it and Unblock the Notifications