குழந்தை நீதி கதைகள்: வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு, காகமும் அன்னமும் , கனிவுடன் பழகு!
சென்னை: Kids story in Tamil: "பிறருடைய குறைகளை நாம் சுட்டிக்காட்டும்போது நம்முடைய குறைகளை உலகம் அறிய ஆரம்பிக்கிறது." ஹலோ குட்டீஸ், நம்ம எல்லாரும் காக்கா ரொம்ப பிடிக்கும்ல. ஒரு சுட்டிக் காக்கா எப்படி கெட்டி காக்கா ஆச்சு ன்னு ஒரு குட்டி கதை பாப்போம்!
அழகிய கடற்கரை பகுதியில் நிறைய பறவையினங்கள் சந்தோசமாய் வாழ்ந்து வந்தன. அங்கு ஒரு குட்டி காகம் எல்லோரிடமும் கர்வமாய் நடந்துக்கொள்ளும். கேலி செய்யும். அந்த காகம் அது தன்னை மிக பெரிய அறிவாளி எனக்கு தான் மற்றவர்களை விட அனைத்தும் தெரியும் என்ற ஆணவத்தில் திரிந்தது. அங்கு இருக்கும் மற்ற பறவைகைளை வம்புக்கு இழுத்து போட்டி போட்டு தன்னை சிறந்தவனாக காட்டி கொண்டு மிதப்பில் அலைந்தது.
அந்த காகம் ஒருநாள் கடற்கரை ஓரமாக சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு அன்னப்பறவையை கண்டது. அதன் அருகில் சென்று,

"அண்ணா, நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க. ஆனா, பாவம் உங்களால் என்னைப்போல பறக்க முடியாதுல" என கேலி செய்தது.
"தம்பி, நான் இங்கே சிறிது நேரம் ஓய்வேடுக்க வந்திருக்கே. உன்னோட வாக்கு வாதம் பண்ண வரல. போய்விடு என்றது அன்னப்பறவை. அதற்கு காகம் சிரித்த வாறு, "என்னோட போட்டி போட்டு தான் பாருங்களேன்" என்றது.
அன்னப்பறவை சரி என்றது. சற்று கோபமாக,
காகம் சொன்னது , "நாம் இருவரும் கடற்கரையில் சில மைல்கள் பறந்து செல்வோம். யார் முதலில் செல்கிறார்களோ, அவர்கள் சிறந்தவர்கள் என்று, அன்னப்பறவை தலையாட்டி சம்மதம் சொன்னது. இந்த போட்டியை மற்ற பறவைகளும் மிக ஆர்வமாக பார்க்க தயாராகின
இருவரும் பறக்க ஆயத்தமானார்கள். காகம் தான் குண்டாக இருப்பதை மறந்து முதலில் வேகமாக பறந்தது. அன்னமோ அதன் போக்கில் நிதானமாக பறந்தது. சிறிது தூரத்தில் காகத்திற்கு மயக்கம் வருவதுப்போல் திணறியது. அதை கவனித்த அன்னப்பறவை காகத்திடம், "என்ன தம்பி என்னாச்சு" என்றது. அதற்கு காகம் "என்னால் முடியவில்லை அண்ணா, தலை சுற்றுகிறது. கடலில் விழுந்து விடுவேன் என்று பயமாக உள்ளது" என்றது. இரக்கப்பட்ட அன்னப்பறவை, "சரி , என் முதுகில் உட்காரு" நான் கரையில் விடுகிறேன் என்றது. இருவரும் கரைக்கு வந்தன.

"அப்பாடா பிழைச்சேன். நன்றி அண்ணா" என்றது குட்டி காகம். அன்னப்பறவை சிரித்தது. "இனி யாரிடமும் இப்படி நடக்க மாட்டேன் என் தவற்றை உணர்ந்தேன்" என வருந்தி விடைப் பெற்றது அந்த கெட்டி காகம்.
செல்வங்களே! உலகில் தன்னை விட பெரியவர்கள் இருந்து கொண்டு தான் இருப்பார்கள். அதற்காக மற்றவர்களை ஏளனம் செய்தால் ஒருநாள் அதற்கான பலன் கிடைக்கும். அனைவரிடமும் கனிவோடு பழக வேண்டும். கர்வம் எப்போதும் கூடாது. அன்பு விதைப்போம்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications