எலேய் உங்க அநியாயத்துக்கு ஒரு அளவு இல்லையாடா..? விளம்பரத்தை பார்த்து ஷாக்கான நெட்டிசன்கள்
திருவனந்தபுரம்: நூதனமான பல்வேறு விளம்பரங்கள் ஒவ்வொரு நாளும் வருகின்றன. சில விளம்பரங்கள் மக்களை மிகவும் ரசிக்க வைக்கும். சில விளம்பரங்கள் பேச வைக்கும். சில விளம்பரங்கள் திகைக்க வைக்கும். அப்படி ஒரு விளம்பரம் தான் மிளகாய் பொடி விளம்பரம். கேரளாவில் எடுக்கப்பட்ட அந்த விளம்பரம் மிகப்பெரிய பேசுபொருளாகி இருக்கிறது.
90 ஸ் கிட்ஸ் பலருக்கும் அந்த கால விளம்பரங்கள் மறக்காமல் ஞாபகம் இருக்கும் உதாரணத்திறகு மில்க் பிகிஸ், பெவிகால் விளம்பரம், சூர்யாவின் நவரத்னா ஆயில் விளம்பரம், சிம்ரன் நடிச்ச மிரண்டா விளம்பரம், நாசர் நடிச்ச அக்னி டிஎம்டி முறுக்கு கம்பிகள். நெஸ்ட்லே சாக்லெட், ராஜ்மஹால் விளம்பரம், காத்து இப்ப நம்ம பக்க வீசுது என பல விளம்பரங்கள் 90களில் பிறந்தவர்கள் பார்த்திருப்பார்கள். அதையே சாலைகளில் செல்லும் போது முணுமுணுத்துக்கொண்டிருப்பார்கள்,

இப்போது எத்தனையோ விளம்பரங்கள் வந்தாலும் 90களில் வந்தது போல் இல்லை என்ற குறை உள்ளது,.
இந்நிலையில் தேஜஸ் மிளகாய் பொடி விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் ஆசிட்டுடன் ஒருவர் ஒரு பெண் மீது அடிக்க வருவார்.அதைபார்த்து பயப்படாமல் அந்த பெண் தேஜஸ் மிளகாய் பொடி பாக்கெட்டை கிழித்து அவர் கண்ணீல் போட்டுவிட்டு செல்வார். இந்த விளம்பரம் தான் நெட்டிசன்களை திகைப்பில் ஆழ்த்தி உள்ளது. இரண்டு நாட்களாக இது பேசுபொருளாகவும் உள்ளது. இது கேரளாவில் எடுக்கப்பட்ட விளம்பரம் ஆகும்.
எலேய் உங்க அநியாயத்துக்கு ஒரு அளவு இல்லையாடா..? 😂😂 pic.twitter.com/LTA257C5YJ
— கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@Greesedabba2) May 31, 2023
முன்னதாக இதேபோல் கேரளாவில் சோப்பு விளம்பரம் ஒன்று எடுக்கப்பட்டது. கடத்தல் காட்சிகளுடன் போலீஸ் சேசிங் பைட் என்று வேறு மாதிரி இருக்கும். கடைசியில் அந்த பெண் கல்யாணமானவர் என்பது தெரிந்துவிடும். இந்த விளம்பரமும் இன்றுவரை பேசப்படுகிறது.நெட்டிசன்கள் மிளகாய் பொடி விளம்பரத்தை ட்விட்டரில் ஷேர் செய்து விமர்சித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications