கண்டிப்பா தல... நீ சொன்ன பின்னால சும்மா இருப்பமா..?
நடிகர் கமல்ஹாசன் தனது இயக்கத் தொண்டர்களை மக்களுக்கு மழைக்கால உதவிகளை செய்ய வேண்டும் என கேட்டிருப்பது குறித்து டிவிட்டரில் கருத்துக்கள் பகீரப்பட்டு வருகிறது.
Recommended Video
சென்னை : சென்னை நடிகர் கமல்ஹாசன் தனது இயக்கத் தொண்டர்களை மக்களுக்கு மழைக்கால உதவிகளை செய்ய வேண்டும் என கேட்டிருப்பது குறித்து டிவிட்டரில் கருத்துக்கள் பகீரப்பட்டு வருகிறது.
நடிகர் கமல்ஹாசன் இயக்கத்தொண்டர்கள் எப்போதும் போல் மழைக்கால உதவிகள் செய்யவேண்டும் என்றும் அப்போது அரசுப் பணியாளர்களுக்கு இடைஞ்சல் தரக்கூடாது என்றும் அவர்களை கேலி செய்யக்கூடாது என்றும் கூறியுள்ளார்,
மேலும் ஆபத்திற்கு பாவமில்லை என்றும் ஒரு உள்குத்து வைத்துள்ளார். அவரது இந்த டிவிட்டுக்கு அவரது ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
|
போவியா..
உ.பியில் கமல்மீது கேஸ்:செய்தி
யோகிக்கு நம்ம #மர்மயோகிய பத்தி தெரியல
#அம்மா கிட்டயே கேஸ்ல ஜெயிச்சர்வர்க்கு இது சும்மா..போவியா!! என்கிறது இந்த டிவிட்
|
இருந்தாலே போதும்
ஸ்டிக்கர் ஒட்டாம இருந்தாலே போதும் ஆண்டவரே... என்கிறார் இந்த நெட்டிசன்..
|
இந்தா போரோம்
கண்டிப்பா தல...நீ சொன்ன பின்னால சும்மா இருப்பமா..?
இந்தா போரோம் சொசைட்டிக்கு.. என்கிறார் இந்த வலைஞர்
|
ஒரு உள்குத்து
நீங்க சொல்றதுக்கு முன்னாடியே அவனவன் உதவியில இறங்கியாச்சு நண்பா.
ஆபத்துக்கு பாவமில்லைனு ஒரு உள்குத்து டமால் டுமீல் நண்பா.. என்கிறது இந்த டிவிட்
|
மேன்மக்கள் மேன்மக்களே
ஆட்சி பிழையை சுட்டி காட்டுகிறார்
எழுத்துப்பிழையை சுட்டி காட்டுகிறது எதிரணி
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே.. என்கிறது இந்த டிவிட்..