போன் பேசி முடிச்ச உடனே யாரு போன்லனு கேட்குறதை எப்போ நிறுத்துறாங்களோ.. அப்போதான் இந்தியா வல்லரசாகும்!
சென்னை : செல்போன் இல்லாமல் ஒரு வேலையும் ஓடாது என்ற மனநிலையில் இருப்பவர்களைக் கலாய்த்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
இரவில் தூங்க விடாமல் மன அழுத்தம் ஒருபுறம் துரத்துகிறதென்றால், மறுபுறம் நம் தூக்கத்திற்கு எதிரியாக இருப்பது செல்போன்கள் தான். பகலெல்லாம் வேலைக்கு, மற்றவர்களைத் தொடர்பு கொள்வதற்கு என உதவியாக இருக்கும் செல்போன்களை, இரவில் சிறிதுநேரம் பொழுதைப் போக்கலாம் எனக் கையில் எடுத்தால், அவ்வளவுதான் அன்றைய தூக்கத்திற்கு நாமே வைத்துக் கொள்ளும் சூனியம்தான் அது.
சமயத்தில் செல்போன்கள் நம்மைத் தூங்கவிடாமல் செய்கிறதா அல்லது நாம் தூக்கம் வராமல் செல்போனை நோண்டுகிறோமா என, 'பாவம் அவரே கன்பியூஸ் ஆகிட்டார்' என்ற ரேஞ்சுக்கு நம்மை புலம்ப வைத்து விடுகிறது இந்த செல்போன்.
பிறகென்ன இரவுநேரம் வந்து விட்டதால், செல்போன்களைக் கையில் எடுத்த கையோடு, அதனைக் கலாய்த்தும் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான செல்போன் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...























Click it and Unblock the Notifications