அப்புறம் என்னங்க.. டூவீலரை 4வது மாடிலயும், காரை மேம்பாலத்துலயும் நிறுத்த வேண்டியதுதான!
சென்னை : வடகிழக்குப் பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ள நிலையில், வழக்கம்போல் மீம்ஸ் போட்டு மழையைக் கொண்டாட ஆரம்பித்து விட்டனர் நம் நெட்டிசன்கள்.
நவம்பர், டிசம்பர் வந்து விட்டாலே நம் மீமர்களுக்கு தனி குஷி வந்துவிடும். வெயில் காலத்தில்கூட அவ்வளவாக கன்டெண்ட் கிடைக்காது. ஆனால் மழைகாலம் என்றால் மழை, வெள்ளம், படகு, பள்ளிகள் விடுமுறை என விதவிதமாக அவர்களுக்கு கண்டெண்ட் கிடைத்துக் கொண்டே இருக்கும். அதனாலேயே மழையைத் திட்டியும், கொண்டாடியும் என விதவிதமாக மீம்ஸ்களைப் பகிர ஆரம்பித்து விடுவார்கள்.
இப்போதும் அப்படித்தான் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் மழை தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டது. அதனால் பள்ளிகளுக்கும் விடுமுறை கிடைத்து வருகிறது. பிறகென்ன வழக்கம் போல் தங்கள் ஸ்டைலில் மழை மீம்ஸ்களால் இணையத்தைக் குளிர வைத்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
கடந்த மாதம் விடப்பட்ட ரெட் அலர்ட்டை நினைவு படுத்துவதுபோல், இந்தமுறை மழை என்றதும், 'டூவீலரை எல்லாம் நாலாவது மாடில பார்க் பண்ணிடுங்க.. காரை எல்லாம் மேம்பாலத்துல நிப்பாட்டிடுங்க' என மீம்ஸ் போட்டு வருகின்றனர். அதோடு, பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை கிடைக்கும் என மாணவர்கள் கேட்பது போலவும் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட மழை பற்றிய நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...























Click it and Unblock the Notifications