மழையும் நம்ம சம்சாரமும் பேசிப்பாங்களோ..சில சமயம் விட்டு விட்டு அடிக்குது.. பல சமயம் விடாம அடிக்குது!
சென்னை : வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தைப் போலவே சமூகவலைதளப் பக்கங்களும் மழையால் குளிர்ந்து கிடக்கின்றன.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ளதால், தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்றில் இருந்தே மழை கொட்டி வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு பல மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவித்து விட்டனர். இன்னமும் மழை நிற்காத நிலையில், நாளையும் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதனால், இதுவரை செய்தி சேனல்கள் எந்தப் பக்கம் என்றுகூட எட்டிப் பார்க்காதவர்கள் எல்லாம், தங்கள் மாவட்டங்களுக்கும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுமா என ஆர்வமாக செய்திகளை பார்த்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, செய்திகளில் அடிபடும் செம்பரம்பாக்கம் என்ற வார்த்தை வேறு சென்னைக்காரர்களை பிளாஷ்பேக்கிற்கெல்லாம் கொண்டு சென்று வருகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கார்களை எல்லாம் மக்கள் பாலத்தில் பார்க் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
இப்படி எந்தப் பக்கம் திரும்பினாலும் மழை, மழை என மழை பற்றிய செய்திகளாகக் கொட்டிக் கொண்டிருக்க, சமூகவலைதளப் பக்கத்திலும் மழை பற்றிய மீம்ஸ்கள்தான் கலகலக்க வைத்து வருகின்றன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மழை ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...


















Click it and Unblock the Notifications