Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னைவாசிகள் இப்போது.. ஏன் தெளியவச்சு தெளியவச்சு அடிக்கிறீங்க.. ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ளயேவா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடகிழக்கு பருவ மழை வழக்கம் போல் வேலையை காட்டி வருகிறது. சென்னையில் விட்டு விட்டு மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் ஏன் தெளியவச்சு தெளியவச்ச அடிக்கிறீங்க என்று வடகிழக்கு பருவ மழையை பார்த்து மக்கள் கேட்பது போல் மீம்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

சென்னையில் வழக்கத்தை விட இந்த முறை அதிகமாக மழை பெய்து வருகிறது. இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மறுபக்கம் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலைகொண்டு இருக்கிறது. இந்த இரு காரணங்களால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.

chennai rains: memes going viral about More rains are possible tonight depending on further development

குறிப்பாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கடந்த 2 தினங்களாக பரவலாகவே மழை பெய்து வருகிறது. நேற்று சென்னையில் காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்த நிலையில், அடிக்கடி மேகக்கூட்டங்கள் ஒரு சேர வந்து குவிந்து மழை கொட்டியது. கொஞ்சம் தெளிவாக சொல்வது என்றால் தெளிய வைத்து தெளிய வைத்து மக்களை அடித்து வருகிறது. அவ்வை சண்முகி படத்தில் டெல்லி கணேஷை அடிப்பது போல் மழை சென்னை மக்களை அடித்து வருகிறது. இப்போது வரை இதுதான் நிலை.

சென்னையில் நேற்று கொரட்டூர், பாடி, அம்பத்தூர், முகப்பேர் போன்ற பகுதிகளில் மிக மோசமான மழை பெய்தது. பாதிப்பும் அதிகமாக இருந்தது. இதேபோல் ஒரே நாளில் அண்ணா நகர், திருவொற்றியூர், ராயபுரம், வண்ணாரப்பேட்டை வடசென்னை பகுதிகளில் மிக அதிகமான கனமழை பெய்தது. அதேநேரம் எழும்பூர், கோடம்பாக்கம், தியாகராயநகர், போன்ற பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை வெளுத்து வாங்கியதால் சாலைகள் வெள்ளக்காடாக மாறியது..

காலையில் இருந்து மாலை வரை பெய்த மழை காரணமாக அம்பத்தூர், பாடி, ராயபுரம், அமைந்தகரை, ஆதம்பாக்கம், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீர் தேங்கியது. குரோம்பேட்டை பகுதியில் ஜிஎஎஸ்டி சாலையில் தண்ணீர் முழங்கால் அளவிற்கு தேங்கியதுத. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பும் தண்ணீர் தேங்கியது. கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் நேற்று இரவு கனமழை காரணமாக முற்றிலும் முடங்கியது. ஜிஎஸ்டி சாலை, அண்ணா சாலை, ஓஎம்ஆர் சாலைகளில் பயணித்தவர்கள் மிகவும் நொந்து போனார்கள். ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள வேளச்சேரி, தரமணி, பெருங்குடி, சோழிங்கநல்லூர், ரேடியல் சாலை பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ளநீர் உடனே வெளியேற முடியாத காரணத்தால் வாகனங்கள் கடும் நெரிசலை சந்தித்தன.

அதேநேரம் சென்னையில் மழை நீர் தேங்கிய இடங்களில் மழை நீரை உடனுக்குடன் அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். தாம்பரம் பகுதியிலும் மழை நீர் தேங்கிய இடங்களில் மழை நீரை அகற்றும் பணிகள் இந்த முறை வழக்கத்தைவிட வேகமாகவே இருந்தது. சாலைகள் மோசமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் அவதிப்படும் நிலையும், பள்ளத்தில் விழுந்து காயம் அடையும் நிலையும் பல இடங்களில் ஏற்பட்டது. இப்படியான நிலையில், நேற்று இரவு சில மணி நேரத்தில் பெய்த கனமழை, சில சுரங்கப்பாதைகளை மூழ்கடித்தது.

இரவு 7 மணி அளவில் பெய்த மழை, மக்களை மொத்தமாக முடக்கவும் செய்தது. அதேநேரம் மழை நீரை வெளியேற்றும் பணியினை இரவு பகலாக மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகிறது. இன்று மழை நின்றால் இயல்பு நிலை திரும்பலாம் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில், மழை விட்டு விட்டு இன்றும் பெய்து வருகிறது. இதனால் சென்னை மக்கள் என்னடா இது. ஏன் தெளியவச்சு தெளியவச்சு அடிக்கிறீங்க என்று வடகிழக்கு பருவ மழையை பார்த்து கேட்கும் நிலை உள்ளது. இது தொடர்பான மீம்ஸ் வீடியோக்களும் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+