பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போனவங்க எல்லாம் திரும்பி வர்றாங்கள்ல.. அப்டித்தானே இருக்கும்!
சென்னை : பொங்கலுக்கு சொந்த ஊருக்குச் சென்றவர்கள் எல்லாம் மீண்டும் சென்னைக்கு திரும்பத் தொடங்கி விட்டதால், டிராபிக் அதிகமாகி விட்டதாக மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
பொங்கல், தீபாவளி என பண்டிகை காலம் வந்து விட்டாலே சென்னை போன்ற நகரங்கள் ஏறக்குறைய காலியாகி விடும். ஏனென்றால் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊருக்குக் கிளம்பி விடுவார்கள் இங்குள்ள வெளியூர் மக்கள். அதனால் சாலைகள் எல்லாம் வெறிச்சோடிக் கிடக்கும். ஆனால் இந்த சீனெல்லாம் இரண்டு மூன்று நாட்களுக்குத்தான். மீண்டும் விடுமுறை முடிந்ததும் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி விடும் சென்னை.
இப்போதும் அப்படித்தான் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்குச் சென்றவர்கள் எல்லாம் மீண்டும் சென்னைக்கு திரும்பி வருவதால், சாலைகள் எல்லாம் பழையபடி டிராபிக்கால் திக்குமுக்காடி வருகின்றன. பிறகென்ன இதையும் மீம்ஸ் போட்டு தங்கள் ஸ்டைலில் சமூகவலைதளப் பக்கங்களில் புலம்பி வருகின்றனர் நம் மக்கள்.
கூடவே பொங்கல் விடுமுறை முடிந்து மீண்டும் அலுவலகம் செல்ல வேண்டும் கவலையையும் சிரிக்கும்படி மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர். "பொங்கல் லீவையெல்லாம் ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு.. இனி ஆபிஸ் போகணும்னு நினைச்சாலே பதறுதே!" என்றும், " பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போனவங்க எல்லாம் திரும்பி வர்றாங்கள்ல.. அப்டித்தானே இருக்கும்!" என்றும் விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications