மேல நெருப்பைக் கொளுத்தி விட்டு.. கீழ ஐஸ் தண்ணிய தெளிச்ச மாதிரி இருக்கு.. வேறன்ன கிளைமேட்தான்!
சென்னை: இரவில் பனி, பகலில் கொளுத்தும் வெயில் என இப்போதே கொஞ்சம் கொஞ்சமாக மே மாதத்தை சூரியன் கண்ணில் காட்டி வருவதாக மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
பிப்ரவரி மாதமே இன்னமும் முடியவில்லை. மாசி மாசப். பனி. மச்சைப் பிளக்கும் என்ற பழமொழிக்கேற்ப இரவில் பனி பெய்து வருகிறது. தை மாதம் போல் இல்லாவிட்டாலும், கொஞ்சம் இரவில் பனி இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இரவில் பெய்த பனிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்பதுபோல், பகலில் வெயில் கொளுத்தி எடுக்கிறது.
வழக்கமாக மழைக்காலம், பனிக்காலம் முடிந்து வெயில் காலம் ஆரம்பிக்கிறது என்றாலே, ஏப்ரல், மே மாதங்களை நினைத்து தான் மக்கள் கொஞ்சம் அலறுவார்கள். ஆனால் இப்போதோ பிப்ரவரி மாதத்திலேயே பகலில் குழாயில் சுடுதண்ணீர் வரும் அளவிற்கு வெயில் வாட்டத் தொடங்கி விட்டது.
இப்படி பனி, வெயில் என மாறி மாறி நம்மை படுத்தி வருகிறது என்றால், மற்றொரு புறம் கொசுவும் பகல், இரவு என பார்க்காமல் நம்மை கடித்து எடுத்து வருகிறது. பிறகென்ன வழக்கம் போல் தங்களது புலம்பல்களை எல்லாம் மீம்ஸ்களாகப் பகிரத் தொடங்கி விட்டனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான குளிர், வெயில் மற்றும் கொசு மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications