நல்லவேளை பண்டிகைய பொங்கல்ல வச்சாங்க.. உப்புமால மட்டும் வச்சிருந்தாங்க செத்தே போயிருப்போம்!
சென்னை : பொங்கல் பண்டிகை முடிந்து ஒரு வாரத்திற்கு மேலாகியும், இன்னமும் பொங்கல் சாப்பிட்டதில் இருந்து வெளியில் வரவில்லை போலும் நம் நெட்டிசன்கள். அவர்கள் பகிரும் மீம்ஸ்களைப் பார்த்தாலே அது நன்றாகத் தெரிகிறது.
சாப்பாடு பற்றிய மீம்ஸ்களைப் பகிரச் சொன்னாலும் நம் நெட்டிசன்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. பாகுபாடே இல்லாமல் சைவம், அசைவம் என கலந்து கட்டி, இணையத்தை கமகமக்க வைத்து விடுவார்கள். இப்போதும் அப்படித்தான் விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து, தங்களது சாப்பாட்டு பிரியத்தை எல்லாம் மீம்ஸ்களாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
"சுவரொட்டிய வாங்கி கிரேவி பண்ண சொன்னா.. உன் சம்சாரம் வால்போஸ்டரை கிழிச்சு போட்டு சமைச்சுட்டு இருக்கா!", என்றும், "நல்லவேளை பண்டிகைய பொங்கல்ல வச்சாங்க.. உப்புமால மட்டும் வச்சிருந்தாங்க செத்தே போயிருப்போம்!" என்றும் சைடு கேப்பில் மறக்காமல் பொங்கலை வைத்தும் கலாய்த்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications