ச்சே.. இப்டியா எல்லாத்துக்கும் ஒருநாள் கொண்டாடுறது.. பயந்து பயந்து வாழ முடியலை பரமா!
சகோதரர் தினத்தைப் பார்த்து ஒருதலைக் காதல் செய்பவர்கள் எப்படியெல்லாம் பயப்படுகிறார்கள் என்பது பற்றிய ஜாலி மீம்ஸ்கள்.
சென்னை: ரக்ஷா பந்தனைப் போலவே சகோதரர் தினத்தைப் பார்த்தும் இளைஞர்கள் பயப்படத் தொடங்கிவிட்டதாக மீம்ஸ் போட்டு பங்கம் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஒரு தலையாகக் காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு பிடிக்காத பண்டிகை என்றால் அது ரக்சா பந்தன் தான். எங்கே, தான் காதலிக்கும் பெண், 'அண்ணா..' என தன் கையில் கயிறைக் கட்டி விடுவாரோ என பயந்து, அன்றைய தினம் வெளியே வரவே சிலர் பயப்படுவார்கள். சரி, வருடத்தில் ஒருநாள்தான் அப்படி என்றால், இப்போது புதிது புதிதாக பல நாட்கள் கொண்டாட ஆரம்பித்து, பாவம் இவர்களது வயிற்றில் தான் புளியைக் கரைக்கிறார்கள்.
அந்தவகையில் சகோதரர் தினமான இன்றும், அப்படியான பயத்தில் தான் இளைஞர்கள் பலர் இருப்பதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். எல்லா விசயத்தையும் பாசிடிவ்வாக மட்டுமே பார்க்கும் சிலர், வழக்கம்போல் இதிலும் குறும்பாக யோசித்துள்ளனர்.
அதாவது, 'இன்னைக்கு யாருமே நமக்கு சகோதரர் தின வாழ்த்து சொல்லலையே.. அப்போ ஒரு வேளை காதலா இருக்குமோ..' என மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொள்வதாக சகோதரர் தினத்தையே வேற ஒரு கோணத்தில் கொண்டாடி வருகின்றனர்.
இதோ இவை எல்லாவற்றையும் கலாய்த்து இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வரும் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...