எனக்குப் பொறந்தவ எப்ப வந்து எனக்கு குடை பிடிக்கப் போறாளோ தெரியலையே..!
சென்னையைக் குளிர்வித்து வரும் மழையைப் பற்றிய மீம்ஸ்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: வெயில் இப்படி கொளுத்துகிறதே என புலம்பி வந்த மக்களின் மனதைக் குளிர்விப்பது போல், திடீரென மழை பொழிந்து வருவதை வைத்து நெட்டிசன்களும் சமூகவலைதளங்களில் மீம்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்.

மார்ச் மாதத்திலேயே வெயில் இப்படி பாடாய் படுத்துகிறதே என மக்கள் புலம்பி வந்தனர். வெப்பத்தின் கொடுமையால் பகல் நேரங்களில் வெளியில் செல்லவே மக்கள் அஞ்சி வந்தனர். இந்த சூழ்நிலையில் நேற்று திடீரென, சட்டென மாறியது வானிலை. சிறிதுநேரமே பெய்தாலும், திடீர் மழையால் சென்னை மக்கள் கொஞ்சம் குளிர்ந்துதான் போனார்கள்.

ஒருநாளில் கனவு மாதிரி வந்து போன மழையை நினைத்து, சமூகவலைதளங்களில் மீம்ஸ்களாக நெட்டிசன்கள் பகிரத் தொடங்கிய சூழலில், 'இன்னும் சர்ப்பிரைஸ் இருக்குப்பா..' என வானிலை ஆய்வு மையம், வயிற்றில் பாலை.. இல்லையில்லை மழையை வார்த்தது.

நேற்றைப் போலவே இன்றும் கொஞ்சம் மழை, கொஞ்சம் வெயில் என மாறி மாறி வானிலை இருந்து வருகிறது. இதனால் மக்கள் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பித்து மகிழ்ச்சியில் உள்ளனர். தங்களது மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதமாக சமூகவலைதளங்களிலும் மழை பற்றிய மீம்ஸ்களை சாரலாக தூவி வருகின்றனர்.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட மழை பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...



















Click it and Unblock the Notifications