நல்லா பெய்வ.. 6000 கிடைக்கும்.. தீபாவளிய ஓட்டிடலாம்னு நினைச்சுட்டு இருந்தேன்.. இப்டி ஏமாத்திட்டியே!
சென்னை : தீபாவளி முடிந்து விட்டாலும், விடுமுறை தொடர்வதால் தீபாவளி பற்றிய மீம்ஸ்களைப் பகிர்ந்து இன்னமும் தங்களைக் கொண்டாட்ட மோடிலேயே வைத்திருக்கின்றன நம் நெட்டிசன்கள்.
'மழை விட்டும் தூவானம் விடாத கதையாக' என்று சொல்வார்களே.. அது எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ, நம் நெட்டிசன்களுக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. விடுமுறை, வீட்டில் மிச்சமிருக்கும் பட்டாசுகள் என மக்கள்தான் இன்னமும் தீபாவளியை பட்டாசு வெடித்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், நம் குறும்புக்கார நெட்டிசன்களும் தீபாவளி முடிந்தபிறகும் கொண்டாட்ட மீம்ஸ்களைப் பகிர்ந்து, இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர்.
அதிலும், கடந்த மாதம் விடப்பட்ட ரெட் அலர்ட்டிலிருந்து இன்னமும் அவர்கள் வெளியில் வரவில்லை என்பது அவர்கள் பகிரும் மீம்ஸ்களைப் பார்த்தாலே புரிகிறது. அப்போது வாங்கிய ரவையை வைத்துதான் தீபாவளி பலகாரம் செய்துள்ளனர் என்பதில் ஆரம்பித்து, 'நல்லா பெய்வ.. 6000 கிடைக்கும்.. தீபாவளிய ஓட்டிடலாம்னு நினைச்சுட்டு இருந்தேன்.. இப்டி ஏமாத்திட்டியே!' என பெருமழையைத் திட்டுவது வரை விதவிதமாக மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...
























Click it and Unblock the Notifications