தக்காளியே இல்லாம இது புளிக்குழம்பா, ரசமான்னே தெரியலையே.. கேட்டா டைவர்ஸ் வரை போய்டுமே!
சென்னை : தக்காளி விலை விரைவில் குறைந்து பழைய நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் அதிரடியாக விலை உயர்ந்திருப்பதை வைத்து, சமூகவலைதளங்களில் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

தக்காளி இல்லாமல் குழம்பு வைப்பது எப்படி? என மக்கள் கூகுள் பண்ணி தேடும் அளவிற்கு, தக்காளி விலை இப்போதைக்கு குறைவதாகத் தெரியவில்லை. 10 நாட்களில் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குறைவது போல் குறைந்து மீண்டும் பழைய அளவிற்கே விலை அதிகமாகி விட்டது தக்காளி.

கடந்த சில நாட்களாக கிலோ ரூ. 100 என்ற அளவில் விற்கப்பட்டு வந்த தக்காளி, இன்று மீண்டும் அதிரடியாக கிலோ ரூ.140 ஆக உயர்ந்து மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பிறகென்ன சில நாட்களாக தக்காளி மீம்ஸ்களுக்கு பிரேக் கொடுத்திருந்த நம் நெட்டிசன்கள், மீண்டும் அதனை தூசி தட்டி எடுத்து சமூகவலைதளங்களில் பகிரத் தொடங்கி விட்டனர்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான தக்காளி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...


















Click it and Unblock the Notifications