வந்தாரை வாழ வைக்கும் சென்னை.. டிசம்பர் வந்தால் நீந்தவும் வைக்கும் உன்னை!
சென்னை: வடகிழக்கு பருவமழையால் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், இணையத்திலும் மீம்ஸ் மழை பொழிந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மழைக்காலம் வந்து விட்டாலே நம்மூரில் பலருக்கு குளிப்பதற்கு மனசே வராது. செண்ட் பாட்டில்கள் மட்டும்தான் அவர்களது ஆபத்பாந்தவன். வெளியில் எங்கு செல்வதாக இருந்தாலும் முகத்தை மட்டும் கழுவி விட்டு, ( சில பேர் முகத்தைக்கூட கழுவுவதில்லை.. தண்ணீர் ஜில் லென்று இருக்கும்லனு காரணம் வேற சொல்வாங்க... ) வெளியில் கிளம்பி விடுகின்றனர்.
வெளியில் செல்பவர்கள் இப்படி என்றால், வீட்டில் இருப்பவர்களை வெளியில் துணியை காயப்போடுவது, எடுக்க வைப்பது என வெயிலும், மழையும் மாற்றி மாற்றி டிரில் வாங்கி விடுகிறார்கள்.
பிறகென்ன இதெல்லாம் மீம்ஸ்களுக்கு லட்டு மாதிரி கிடைத்த கன்டெண்ட்டுகள் என களத்தில் இறங்கி விட்டனர் மீமர்கள். இதனால் சமூகவலைதளப் பக்கங்கள் முழுவதும் விதவிதமான மழை ஸ்பெஷல் மீம்ஸ்கள்தான் நிறைந்துகிடக்கின்றன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

























Click it and Unblock the Notifications