தீபாவளி வந்திருச்சே.. என்னடா இன்னும் உன்னை காணோமேனு நினைச்சேன்..கரெக்ட்டா வந்துட்ட உன் வேலையை காட்ட!
சென்னை: வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பல பகுதிகளில் கொட்டித் தீர்த்து வருவதைப் போலவே, மீமர்களும் மழை பற்றிய மீம்ஸ்களை மழையாகப் பொழிந்து வருகின்றனர்.
பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற மக்களின் ஆசையில் தண்ணீரை ஊற்றிக் கெடுத்து விடும் இந்த மழை. கடந்த சில ஆண்டுகளாக அரசே குறிப்பிட்ட நேரத்தில்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என அறிவித்து வருவதால், எங்கே அந்த நேரத்தில் சரியாக மழை பெய்து விடுமோ என்ற பயமும் மக்களுக்கு இருந்து வருகிறது.
இந்தாண்டும் தீபாவளிக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மக்களும் ஷாப்பிங் செல்ல தயங்குவதால், வியாபாரிகளும் தீபாவளி லாபம் நமத்துப் போய் விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். ஆனால், மழை வந்தால் தீபாவளிக்கு கூடுதலாக விடுமுறை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் மாணவர்கள், தினமும் மழை வந்தால் நல்லது என நினைக்கின்றனர்.
இப்படியாக சந்தோசம், கவலை, பயம் என மக்கள் மனதில் கலந்து கட்டி அடித்து வரும் மழையை வைத்து, நெட்டிசன்களும் கலவையான நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ சமூகவலைதளத்தில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...























Click it and Unblock the Notifications