நா ஆபிஸ்குள்ள இருக்கப்பல்லாம் வராம.. கரக்டா வீட்டுக்கு கிளம்பும்போது வரியே!
சென்னை: இரவில் கொட்டித் தீர்த்த மழையைப் பார்த்து, இன்று பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாந்த மாணவர்களை மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
வெப்பத்தால் தவித்துக் கொண்டிருக்கும் மக்களை சந்தோசப் படுத்தும் வகையில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவில் மழை பொழிந்து வருகிறது. ஞாயிறு முடியப் போகிறதே நாளை திங்கள் பள்ளி, கல்லூரிக்குச் செல்ல வேண்டுமே என்ற சோகத்தில் இருந்த மாணவர்களுக்கு இந்த மழை குஷியைத் தந்தது.
இரவில் விடாமல் கொட்டிய மழை, காலையிலும் தொடரும், தங்களுக்கு விடுமுறை கிடைக்கும் என பெரிதும் அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களது கனவு பலிக்கவில்லை. வழக்கம்போல் காலையில் டூட்டிக்கு வந்துவிட்டார் மிஸ்டர்.சூரியன்.
இதனால் கடுப்போடு பள்ளி, கல்லூரிக்கு கிளம்பிய மாணவர்களை, மேலும் கடுப்பேற்றுவது போல் மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட மழை பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக..
























Click it and Unblock the Notifications