ஒரு மாசம்னா ஓகே சமாளிச்சுடலாம்.. ஆனா, ஒவ்வொரு மாசமும் இப்டியேன்னா எப்டி.. முடியல!
சென்னை: 'கையில வாங்கினேன்.. பையில போடலே.. காசு போன இடம் தெரியல.. அட காசு போன இடம் தெரியல..' என வாங்கிய சம்பளம் எல்லாம் இஎம்ஐக்கே போய் விட்டது என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

முன்பெல்லாம் மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு 20 தேதிக்கு மேல்தான் பணப் பற்றாக்குறை வரும். அப்போதுதான் அடுத்த மாதச் சம்பளம் எப்போது வரும் என காலண்டரையே அடிக்கடி பார்ப்பார்கள். ஆனால் நிலைமை இப்போது தலைகீழ். இப்போதெல்லாம் எப்போது சம்பளம் வாங்கினாலும், வருமானம் அனைத்தையும் இஎம்ஐயே சாப்பிட்டு விடுகிறது.

இதனால் சம்பளப் பணம் வங்கிக் கணக்கிற்கு வரும் முன்னரே, இஎம்ஐ ரிமைண்டர் வந்து, 'ரொம்பக் கனவு காணாதே இந்தப் பணத்தை வைத்து..' என நம் தலையில் கொட்டி விடுகிறது. இதனால் அடுத்த மாதச் சம்பளம் எப்போது வரும் என இந்த மாதச் சம்பளம் வாங்கிய நாளிலேயே மக்கள் காலண்டரைப் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

எனவே மாத ஆரம்பத்திலேயே மாதச் சம்பளக்காரர்கள் தங்கள் பணக்கஷ்ட புலம்பல்களை எல்லாம் மீம்ஸ்களாக சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான சம்பள மீம்ஸ்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications