இன்ஜினியரீங்கோ.. ஆர்ட்ஸோ.. நீங்க எங்க வேணும்னாலும் அட்மிஷன் போடுங்க.. என் பிளானே வேற!
பள்ளி முடிந்து கல்லூரி செல்ல உள்ள மாணவர்களை வைத்து நகைச்சுவையாக மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.
சென்னை: தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து, அடுத்து மாணவர்கள் என்ன கல்லூரியில் படிப்பார்கள் என்பதை வைத்து மீம்ஸ் போட்டு கலாய்க்கத் தொடங்கி விட்டனர்.

பள்ளிப்படிப்பை முடிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோருக்கு அடுத்து என்ன படிப்பது என்ற குழப்பம் இருக்கத்தான் செய்யும். பெற்றோர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் இவர்களது வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே பெரும்பாலும் அவர்கள் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், பாவம் மீம்ஸ்களில் அவர்கள் தான் ஏதோ விருப்பப்பட்டு கல்லூரியைத் தேடிப் பிடித்து படிப்பதுபோல் கலாய்க்கப்படுகிறார்கள்.

பள்ளி முடியும் வரை, பன்னிரண்டாம் வகுப்பு தான் முக்கியமானது, வாழ்க்கையைத் தீர்மானிக்கும் என்றெல்லாம் பில்டப் கொடுத்து விடுகிறோம். எனவே அதில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்வாகி விட்டால், வாழ்க்கையில் எதையோ பெரிதாக சாதித்தமாதிரியான நினைப்பு அவர்களுக்கு வந்து விடுகிறது. ஆனால் அதற்கு அடுத்து அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடப்பிரிவு, கல்லூரி போன்றவைதான் அவர்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதை மீம்ஸ்களில் அழகாக சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

இதோ அப்படியாக நகைச்சுவையோடு, கருத்தாழமும் கொண்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications