அடிக்கிற வெயிலைப் பார்த்தா.. சூரியன் தலைக்கு மேலே இருக்கா.. இல்ல தலை மேலேயே இருக்கான்னு தெரியல!
மார்ச் மாதத்திலேயே வெயிலின் உக்கிரம் அதிகமாக இருப்பதாக மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: மார்ச் மாதத்திலேயே வெயிலின் கொடுமையைத் தாங்க முடியாமல் மீம்ஸ் போட்டு கதற ஆரம்பித்து விட்டனர் மக்கள்.

கடந்த சில ஆண்டுகளாகவே வெயிலாகட்டும், மழையாகட்டும் அதனதன் சீசன்களில் ஒரு காட்டு காட்டி விட்டுத்தான் செல்கிறது. வீட்டிற்குள்ளேயே இருந்து மழையைக்கூட பொறுத்துக் கொள்ளலாம், ஆனால் வெயிலின் உக்கிர நாக்குகள் வீட்டிற்குள்ளும் நுழைந்து விடுகிறது. பகல் நேரங்களில் வீட்டிற்குள்கூட இருக்க முடிவதில்லை. அந்தளவிற்கு வெயில் மார்ச் மாதத்திலேயே வாட்டி வதைக்க ஆரம்பித்து விட்டது.

மார்ச்சிலேயே இப்படி என்றால், மே மாதத்தை நினைத்தாலே கண்ணைக் கட்டுகிறது என மக்கள் இப்போதே புலம்ப ஆரம்பித்து விட்டனர். அதிலும் இந்தாண்டு மே மாதம் பாதி வரை பள்ளிகள் செயல்படும் என்ற அறிவிப்பு வேறு பெற்றோர்களை கவலைப்பட வைத்திருக்கிறது. அக்னி நட்சத்திர காலத்தில் எப்படி பிள்ளைகள் பள்ளி சென்று வருவார்கள் என்பதே அவர்களது கவலைக்கு காரணம்.

இப்படியாக ஒரு புறம் வெயிலை நினைத்து மக்கள் கவலைப்பட்டு கொண்டிருக்க, மறுபுறம் வழக்கம் போல் வெயிலை மீம்ஸ் போட்டு கலாய்க்கத் தொடங்கி விட்டனர் நெட்டிசன்கள்.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...












Click it and Unblock the Notifications