அடிக்கிற வெயிலுக்கு வெட்கம் எங்கடா வருது.. மயக்கம்தான் வருது!
சென்னை : அக்னி நட்சத்திரமே இன்னும் ஆரம்பிக்கவில்லை.. ஆனால் அதற்குள் வெயில் இந்தளவுக்கு கொளுத்துகிறதே என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நம் மக்கள்.
கோடைகாலம் வந்து விட்டாலே மக்கள் வியர்வை மழையில் நனைய ஆரம்பித்து விடுவார்கள். வீட்டில் இருந்தாலும் சரி, வெளியில் சென்றாலும் வெயில் அவர்களை சுடாமல் விடுவதில்லை. கொஞ்சம் தண்ணீர் குடிக்காமல் இருந்து விட்டால், வெயிலுக்கு மயக்கமே வந்து விடுகிறது.
ஆனால் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நம் கவிஞர்கள், "வெயில் மட்டுமா அழகு.." என்றும், சித்திரையில் என்ன வரும் வெயில் சிந்துவதால் வெட்கம் வரும்" எனவும் தங்கள் இஷ்டத்துக்கு சினிமாப் பாடல்களை எழுதி விடுகிறார்கள். பிறகென்ன இதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர ஆரம்பித்து விடுகிறார்கள் நம் நெட்டிசன்கள்.
இப்போதும் அப்படித்தான், "சித்திரையில் என்ன வரும் வெயில் சிந்துவதால் வெட்கம் வருமா.. டேய் அடிக்கிற வெயிலுக்கு வெட்கம் எங்கடா வருது.. மயக்கம்தான் வருது!" என்றும், "சாயந்திரம் ஆச்சுனா நா போய்ட்டேனு நினைக்குறாங்க மேடம்.. ஆனா காலைல வரைக்கும் நா சூடாத்தான் இருப்பேன்!" என்றும் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில வெயில் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications