என்னை நினைச்சு நான் பெருமை படுற விசயம்.. காலைல, மதியம், நைட்டுனு கரெக்ட்டா டைமுக்கு பசிச்சிடும்!
ஞாயிற்றுக்கிழமை கறி எடுக்காமல் ரசம் வைத்து விட்டார்கள் என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
சென்னை: ஞாயிற்றுக்கிழமையில் கறி எடுக்காமல் சதி செய்து விட்டார்கள் என வீட்டில் திட்ட முடியாத ஆதங்கத்தை மீம்ஸ் போட்டு கொட்டி வருகின்றனர்.

'ரசம் என்பது நன்கு சாப்பிட்ட சாப்பாடு ஜீரணம் ஆவதற்காக செய்யப்படும் உணவு.. ஆனால் ஞாயிறும் அதுவுமாக அதையே ஒரு சாப்பாடாக சாப்பிடச் சொல்கிறார்களே..' என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள். என்ன காரணம் எனத் தெரியவில்லை.. ஆனால் இன்று நிறைய வீடுகளில் மதியம் ரசம்தான் என்பது இந்த மீம்ஸ்களைப் பார்த்தாலேத் தெரிகிறது.

வழக்கமாக கறிக்குழம்பு வைக்கவில்லை, சாம்பார் வைத்து விட்டார்கள் என்று தான் நெட்டிசன்கள் பீல் பண்ணுவார்கள். ஆனால் இன்று வித்தியாசமாக ரசம் வைத்து விட்டார்கள் என மீம்ஸ்களில் கதறி வருகின்றனர். பாவம் நிறைய பேர் இன்று ரசத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் போலும்.

ஒரு சில காரசாரமாக ரசம் மாதிரி கொஞ்சம் காட்டமாக இருந்தாலும், மற்ற மீம்ஸ்கள் ஜாலியாக ரசிக்கும்படி சிரிக்க வைக்கின்றன. இதோ அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...












Click it and Unblock the Notifications