எல்லாவித கவலைகளையும் மறக்க வைக்கும் சக்தி.. சோத்துக்கு உண்டு.. சோ, வயிறார சாப்டுங்க!
ஞாயிற்றுக்கிழமை பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஏன் இப்படி கடிகாரம் வேகம் வேகமாக ஓடி முடிந்து விடுகிறது என மீம்ஸ் போட்டு கவலைப்பட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

வாரத்தின் மற்ற ஆறு நாட்களில் செய்யாமல் ஒத்திப் போடும் வேலைகள் எல்லாவற்றையும் ஞாயிறு செய்யலாம் என்றே மக்கள் திட்டமிடுவர். குறிப்பாக மாணவர்கள், வெள்ளிக்கிழமை பள்ளியில் தரப்படும் வீட்டுப் பாடங்களை ஞாயிறுதான் செய்ய வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் வேறு சிறப்பு வகுப்புகள் இல்லாவிட்டால், அன்று விளையாட ஓடி விடுவார்கள். படிக்க வேண்டும் என்ற எண்ணமே மாலைக்கு மேல் தான் வரும்.

பெரியவர்களும் அப்படித்தான். ஞாயிறு செய்யலாம் என பலவேலைகளைக் குறித்து வைத்திருப்பார்கள். ஆனால் அந்த ஒருநாளில் எவ்வளவு வேலைகளைத் தான் செய்ய முடியும். ஞாயிற்றுக்கிழமை மாலை வந்ததுமே, 'அடடா இந்த வேலையைச் செய்யவில்லையே, அந்த வேலையைச் செய்யவில்லையே..' என நொந்து கொள்வார்கள்.

சமீபகாலமாக தங்களது புலம்பலை வித்தியாசமாக மீம்ஸ்களாகப் பகிரத் தொடங்கி விட்டனர் மக்கள். அப்படியாக ஞாயிறு புலம்பல்கள் மீம்ஸ்கள் பல சமூகவலைதளங்களில் வலம் வருகின்றன. இதோ அவற்றில் சில உங்களுக்காக...












Click it and Unblock the Notifications