வேளச்‘ஏரி’.. பொத்‘ஏரி’.. கூடுவாஞ்‘ஏரி’.. பெருங்‘குளத்தூர்’.. அப்போ புரியல.. இப்போ நல்லா புரியுது!
சென்னையில் தொடர்மழை பெய்து வருவதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு, தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னை மக்களின் மனநிலையை வைத்து மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து விட்டாலே, மற்ற நகரங்களைவிட, சென்னை மீதுதான் எல்லோருடைய கவனமும் இருக்கும். காரணம் தலைநகர் தான் எப்போதுமே மழை நீர் கோர்த்து, தலைவலியை உண்டாக்கும்.
மற்ற நகரங்களைவிட கொஞ்சம் பாதிப்பு கூடுதலாகவே இருக்கும் என்பதால், சின்ன மழை வந்தாலே சென்னைவாசிகள் மனதில் பயம் வந்துவிடும். சின்ன மழைக்கே அப்படியென்றால், வடகிழக்கு பருவமழையில் பெருமழையை சொல்லவே வேண்டாம். எப்படி வேலைக்குச் செல்வது, வருமானத்திற்கு என்ன செய்வது என மக்கள் ஒருபுறம் கவலையில் இருக்க, வழக்கம் போல் மீம்ஸ்களைப் போட்டு கலாய்க்க ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.

'வெனிஸ் நகரம் என்ன பாஸ்... எங்க சென்னை மழைக்காலம் வந்து விட்டால் வெனிஸ் நகரத்தையே தூக்கி சாப்பிட்டு விடும்..' என வழக்கம் போல், 'எவ்வளவு அடித்தாலும் வலிக்காத மாதிரியே நடிக்கும்' நெட்டிசன்கள், இந்த ரெட் அலர்ட் மழைக்கும் தங்கள் காலரைத் தூக்கி கெத்து காட்டி வருகின்றனர்.
இதோ அப்படியாக கனமழையையும், சென்னையையும் வைத்து சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நகைச்சுவையான சில மீம்ஸ்கள் உங்களுக்காக...


















Click it and Unblock the Notifications