என்னைய திருத்தவே 400 பேரு வேணும்டா.. இதுல நா எங்க நல்ல ஸ்டேட்டஸ் வச்சு 4 பேரை திருத்த!
சென்னை : நம் பிரச்சினைகளை எல்லாம் நாம் கொட்டித் தீர்க்கும் இடம் கடவுள்தான் என மீம்ஸ் போட்டு தங்கள் பிரச்சினைகளை எல்லாம் புலம்பி வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் தங்கள் பிரச்சினைகளை கடவுளிடமும், அப்படி நம்பிக்கை இல்லாதவர்கள் தங்களுக்குள் புலம்பிக் கொள்வார்கள். என்னதான் நண்பர்களிடம் புலம்பினாலும், கடவுளிடம் புலம்புவது போல் இருக்காது நம் மக்களுக்கு. ஆனால், என்ன புலம்பினாலும், கடவுளின் ரியாக்சன் என்னவோ ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது என்பதுதான் பெரும்பாலானவர்களின் கருத்து.
அதனால்தான், அடிக்கடி கடவுளுக்கும், பக்தர்களுக்கும் இடையே நடக்கும் உரையாடல்களை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். அந்த மீம்ஸ்களில் பெரும்பாலும் பணப்பிரச்சினைகள் பிரதானமாக இருந்தாலும், சமயங்களில் முடி பிரச்சினையும் அதில் சேர்ந்து விடுகிறது.
இப்போதும் அப்படித்தான், "என்னைய திருத்தவே 400 பேரு வேணும்டா.. இதுல நா எங்க நல்ல ஸ்டேட்டஸ் வச்சு 4 பேரை திருத்த!", என்றும், "கடவுளே.. என் கஷ்டத்துக்கெல்லாம் முடிவு கட்டுப்பானு வேண்டுனா.. ஓ முடி கொட்டணுமானு கேட்குறாரு!" என்றும் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications