கடவுள் சார்.. என்னைய நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க.. நா வெறும் டம்மி பீஸ்தான்!
சென்னை : புலம்புவது என முடிவு செய்து விட்டால், நம் நெட்டிசன்கள் அதற்கு ஒரு எல்லையே வைக்க மாட்டார்கள். கலந்து கட்டி எல்லா பிரச்சினைகளையும் மீம்ஸ் போட்டு புலம்பித் தீர்த்து விடுவார்கள். இப்போதும் அப்படித்தான் சமூகவலைதளப் பக்கங்களில் மீம்ஸ் வாயிலாக தங்கள் மனக்குமுறல்களையெல்லாம் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.
சரத்குமாரின் ஏய் படத்தில் ஸ்டாம்பைக் காட்டி பேசச் சொன்னால், ஒருவர் கடகடவென பேசுவாரே.. அதேபோல நம் மக்களைப் புலம்பச் சொன்னால் போதும். இடம் பொருள் ஏவல் என எதையும் பார்க்க மாட்டார்கள்... மனதில் உள்ளதையெல்லாம் கொட்டித் தீர்த்து விடுவார்கள்.

இப்போது அவர்கள் அப்படிப் புலம்புவதற்கு மீம்ஸ்கள் நல்லதொரு கருவியாகி விட்டது. இந்தக் காரணம், அந்தக் காரணம் என ஒரு வரையறையே இல்லாமல் எல்லாவற்றையும் பற்றி புலம்பித் தீர்த்து விடுகின்றனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அப்படி அவர்கள் பகிரும் மீம்ஸ்கள் எல்லாமே, பெரும்பாலும் எல்லோருடைய வாழ்க்கையோடும் பொருந்திப் போவதுதான்.
இப்போதும் அப்படித்தான், “கொசு நம்ம ரத்தத்தை உறிஞ்சிட்டு போய் குட்டி போட்டா.. அது நம்ம வாரிசா? இதென்னடா புதுசா இருக்கு!” என கொசுவில் ஆரம்பித்து, “கடவுள் சார்.. என்னைய நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க.. நா வெறும் டம்மி பீஸ்தான்!” என தங்கள் பிரச்சினைகள் வரை எல்லாவற்றையும் கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...


















Click it and Unblock the Notifications