"யாருப்பா நீ.." ஐபிஎல் பைனலில் பவுலிங்கில் அரைசதம் போட்ட தேஷ்பாண்டே! வைத்து செய்யும் நெட்டிசன்கள்
டெல்லி: இன்று ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெற்று வரும் நிலையில், பவுலிங்கில் ரன்களை வாரி வழங்கிய தேஷ்பாண்டே நெட்டிசன்களிடம் வசமாக மாட்டிக் கொண்டார்.
இன்றைய தினம் ஐபிஎல் இறுதிப் போட்டி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. நேற்று நடக்க இருந்த இந்தப் போட்டி மழை காரணமாக இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்பட்ட நிலையில், டாஸ் வென்ற தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் கில்லும், சஹாவும் தொடக்க வீரர்களாக இறங்கினர்.
இதில் ஆரம்பமே சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்கத்திலேயே கில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சஹார் தவறவிட்டார். அதன் பின்னரும் தனது பவுலிங்கிலேயே மற்றொரு கேட்ச்டையும் கூட சஹார் தவறவிட்டார். இது மட்டுமின்றி தொடர்ச்சியாகப் பல சொதப்பலான பீல்டிங்கையே சிஎஸ்கே அணியிடம் இருந்து பார்க்க முடிந்தது. இதனால் குஜராத் அணி மளமளவென ரன்களை குவித்தது.
குறிப்பாகத் தமிழக வீரரான சாய் சுதர்சன் சிஎஸ்கேவுக்கு இன்று வில்லனாக மாறிவிட்டார். ஒன் டவுன் போசிஷனில் இறங்கிய சாய் சுதர்சன் சிஎஸ்கே பவுலர்களை தெறிக்கவிட்டார். 47 பந்துகளில் அவர் 8 பவுன்டரி, 6 சிக்சர்களுடன் 96 ரன்களை விளாசினார். இறுதிப் போட்டியில் அவரது ஸ்டைரக் ரேட் 204ஆக இருந்தது. இன்றைய தினம் பலரும் சாய் சுதர்சன் குறித்தே பேசி வருகின்றனர்.

அதேநேரம் மற்றொரு சிஎஸ்கே வீரரும் ரன்களுக்காக இன்று நெட்டிசன்களிடம் வசமாகச் சிக்கிக் கொண்டார். அதுதான் துஷார் தேஷ்பாண்டே.. ஆனால், அவர் பேட்டிங்கில் ரன் எடுக்கவில்லை.. மாறாக பவுலிங்கில் ரன்களை வாரி வழங்கிவிட்டார். இறுதிப் போட்டியில் மட்டும் 4 ஓவர்களில் தேஷ்பாண்டே, ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் அவர் 56 ரன்களை வாரி வழங்கியிருந்தார்.

துஷார் தேஷ்பாண்டே இந்தாண்டு மட்டும் 16 போட்டிகளில் விளையாடி 564 ரன்களை வாரிக் கொடுத்துள்ளார். ஒரு ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் சிஎஸ்கே அணிக்காக விளையாடி அதிக ரன்கள் குழித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள ருதுராஜ் கெய்க்வாட்டும் அதே 564 ரன்களை தான் எடுத்திருந்தார். இப்போது அவரை தான் நெட்டிசன்கள் வைத்துச் செய்து வருகின்றனர். இதை ஒப்பிட்டே ஒருவர் நக்கல் செய்துள்ளார்.

இன்னும் சிலர் கடந்த ஆண்டுகளில் கிரிஸ் ஜோர்டான் சிஎஸ்கே அணிக்கு எப்படி ரன்களை வாரி வழங்கினோரோ அதுபோன்ற ஒருவர் தான் தேஷ்பாண்டே என பதிவிட்டு வருகின்றனர். இருவருக்கும் சொந்த அணியையே அழிக்கும் ஆற்றல் இருக்கிறதாம்.

அதேபோல மற்றொரு நெட்டிசன் கில்லும் தேஷ்பாண்டேவும் மாறி மாறி ரன்களை குவித்து வருவதாக நக்கலடித்துள்ளார்.

மற்றொருவர் சிஎஸ்கே டிரஸிங் ரூமில் என்ன நடக்கும் என்பதை விளக்கும் வகையிலான படத்தைப் பகிர்ந்துள்ளார். அதாவது தான் இன்று நன்கு பவுலிங் போட்டனா என்று தேஷ்பாண்டே கேட்டால் அதற்கு தோனியின் பதில் இப்படித்தான் இருக்கும் என நக்கலடித்துள்ளார்.

பவுலிங்கில் அரைசதம் அடித்துவிட்டதாக தேஷ்பாண்டேவை பலரும் பாராட்டவும் தவறவில்லை.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications